பக்கம்:தமிழர் மதம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ0 தமிழர் மதம் மாமத்த மளைபுக் கென்ன மனக்கருத் துடைந்து வேற யூமத்தம் பயன்றுய்த் தார்போ லுன்மத்த னாகி யுற்றான்.' (கந்த பு. வள்ளி. உக-உ) என்று, கச்சியப்ப சிவாசாரியார் என்னும் புலவர் சிறிதும் நாண மின்றிப் பாடி யிருக்கின்றார். இடக்கர் மிகுந்தனவும் இயற்கைக்கு மாறானவு மான இக்கதைகள், அகக் கரண வளர்ச்சியும் ஒழுக்க வுயர்வு மில்லாத ஒருவன் கட்டியன வாகும். முதலி லிருந்து முடிவு வரை, கந்த புராணம் முற்றும் கட்டுக் கதை யாகும். முருகனும் வள்ளியும், குமரி நாட்டிலேயே குறிஞ்சி மக்கள் உள்ளத்தில் தோன்றி விட்டனர். ("இந்தப்புளுகு கந்த புராணத்திலு மில்லையே!” "கந்த புராணத்தி லில்லாத புளுகு எந்தப் புராணத்திலு மில்லை." என்னும் பொது மக்கள் கூற்றும் பழமொழியும் இங்குக் கவனிக்கத் தக்கன. முருகன் ‘சரவணம்' என்னும் நாணற் காட்டுப் பொய்கை யிற் பிறக்க வில்லை .அவனுக்கு ஒரே முகமும் இரு கையும் தான். அவன் சூர பதுமன் என்பவனைக் கொல்லவு மில்லை; தேவயானை (தெய்வயானை) என்பவளை மணக்கவு மில்லை. t காங்கேயன், சரவணன் (சரவண பவன்), ஆறு முகன் (சண் முகன் ), பன்னிரு கையன், கார்த்தி கேயன், முதலிய கந்த புராணத்துப் பெயர்க ளெல்லாம் முருகனுக்கு ஒரு சிறிதும் ஏற்கா. நாற்றிசையுடன் மேலுங் கீழுஞ் சேர்ந்த அறு திசை களை, அல்லது கோவில் கொண்டுள்ள ஆறு சிறந்த இடங்களை, முகமாகக் கொள்ளின், ஆறுமுகம் என்னும் பெயர் மட்டும் முருகனுக்குப் பொருந்தும். கந்த புராணம்போன்றே,ஏனைப்புராணங்களும் தமிழருக்கு வேண்டுவனவும் ஏற்பனவும் அல்ல எனக் கூறி விடுக்க. பிராமணருக்கு நல்லவன் என்று பொருள் படும் சுப்பிரமணி யன் என்னும் வடசொற் பெயர், முன்பு திருமாலுக்கும் சிவனுக் கும் பெயராக வழங்கி, இன்று முருகனுக்குச் சிறப்பாக வழங்கி வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழர்_மதம்.pdf/96&oldid=1428965" இலிருந்து மீள்விக்கப்பட்டது