பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வடஇந்தியாவும் ... கி.மு. 1000 ... 500 வரை

195

அறிந்திருந்தார். (IMithyaitaditi Gawtamah.. 1 : 1. 2. 7.) அவரால் முடிந்திருந்தால், இப்பழக்க வழக்கங்களைப் :பெளதாயனர் அகற்றி இருப்பார் என்பதை இது காட்டுகிறது. ஆனால், நர்மதை ஆற்றுக்குத் தெற்கில் உள்ள ஆரியர்களை, அவர்களின் பழைய பழக்க வழக்கங்களைக் கைவிடத் துாண்டுவதற்கான வலுவற்றவராக அவர் இருந்தார். பண்டைய பழக்க வழக்கங்கள், அத்துணை எளிதில் அழிந்துவிடு வதில்லை. உண்மையைக் கூறுவதாயின், அவை என்றுமே அழிவதில்லை. மாறாக, ஆயிரம் ஆயிரம் ஆண்டுவரையும், ஒன்று, இருந்தது இருந்தவாறே, அல்லது சிறிதே திரிந்த திலையில் இறவாது இடம் பெற்றிருக்கும்.

"பெளதாயண தர்ம சூத்திரங்கள்" (Sacred Text Book - the East, பகுதி : 14) என்ற தம்முடையமொழி பெயர்ப்பு நூலில், திருவாளர் பூலர் (Buhler) அவர்கள். அண்ணன் மகனுக்கும், தங்கை மகளுக்கும் போலும் உடன் பிறந்தார் இருவரின் மக்களுக்கு இடையிலான திருமணமாக, "மாவல :பித்ர்ஸ்வரர் துஹத்ற் கமனம" என்ற திருமணத்தைத் தவறான நிலையில் பொருள் கொண்டுள்ளார். இவைபோலும் திருமணங்கள், தென்னிந்தியாவில் முறையானவையே ஆகும். இற்றைய நாளில், தெலுங்கு பிராமணர்களிடையே,உண்மையில், இது கட்டாயமாம் ; ஏனைய தென்னிந்திய பிராமணர்களிடையேயும் இதுவே பெரும்பாலான வழக்கமாம். (தெலுங்கு பிராமணரல்லாதாரிடையே, தென்னாட்டுப் கிராமணரிடையே நன்கு தெரிந்த வழக்கமாம், ஒருவன் தன் உடன்பிறந்தாள் மகனை மனங்கொள்வது பொதுவான வழக்கமாம். அதனால், பிராமணரல்லாதாரால் பேசப்படும் தெலுங்குக் கிளைமொழியில், கோடலு' என்ற சொல், உடன்பிறந்தார் மகள் என்றும் பொருள்படும், மனைவி. என்றும் பொருள்படும்) உடன் பிறந்தான் மகனுக்கும், உடன் பிறந்தாள் மகளுக்குமிடையேயான திருமணமே, வழக்கமான திருமணமாம்; ஆதலின், அவைபோலும் திருமணம் நிகழாத போது, அவ்வுடன் பிறந்தாள் மக்கள், இழந்த அந்நல்வாய்ப்பினுக்கு ஈடு செய்துகொள்ள முயல்வர். அது, வேறுபிற