பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

தமிழர் வரலாறு

இதைப் பண்டைக் காலத்திய மதுரை பற்றிய நாம் அறிந்தனவற்றோடு ஒன்றுபடுத்திக் காணும் முயற்சியில், வெற்றிகாணமாட்டாதே, அறிவுத்திறன் பெருமளவில் பாழ் படுத்தப்பட்டது. முன்பே குறிப்பிடப்பட்ட எறும்பு மனிதர் பற்றிய அவர் கட்டுக்கதை போல, அல்லது, பாண்டிய நாட்டில், ஆறு ஆண்டுகள் நிரம்பியதுமே கருவுறும் பெண்கள் பற்றிய, அவருடைய வேறு ஒரு கட்டுக்கதைபோல (Macrindle. Ancient India as described by Megasthenes and Arrian Page : 144;] இது, மெகஸ்தனிஸ் அவர்களின், எதையும் நம்பும் ஏமாளித்தனத்தை உறுதி செய்யும் மற்றொரு கட்டுக்கதையல்லது வேறு அன்று. வேறு உண்மையான வரலாற்று மூலங்கள் வழியாக அறியவந்த, கி. மு. நான்காம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டிற்கும் பாடலிபுத்ரத்திற்கும் இடையில், போக்குவரவு இருந்து வந்தது. மெகஸ்தனிஸ், அந்நாட்டைக் கேட்டறிந்திருந்தார், என்ற உண்மையை மட்டுமே, அக்கட்டுக்கதை உறுதி செய்யும், உண்மை நிலை இதுவாகவும், திரு. டி. ஆர். பந்தர்க்கார் அவர்கள், எராக் லெஸ்ஸின் மகள் மதுரை ஆண்ட கட்டுக்கதையினை நம்புவது மட்டும் அல்லாமல், இந்தியக் கடவுள் இயல்புகளோடு முற்றிலும் மாறுபடும் "டியொனிலொஸ்", "எராக்லெஸ்" போலும் கிரேக்கக் கடவுள்களுக்குச் சரிசமமாக, இந்தியக் கடவுள்களை, யூகத்தின் மூலம், எத்தகைய அகச்சான்றும் இல்லாமல், ஆக்க முயன்று தோற்றுப் போன ஆசிரியர் கூட்டத்தோடு சேர்ந்துகொள்வதும் செய்துள்ளார்: கிருஷ்ணனின் குழலிலிருந்து எழும், உள்ளம் உருக்கும் இசை, எரக்லெஸின், பருத்த கைத்தடித் தத்துவத்திற்கு, எதிர் துருவம் போன்றதாகவும், திரு. பந்தர்க்கார், கிருஷ்ணனை, எரெக்லெஸுக்குச் சரிசமம் ஆக்கிப்பார்க்கிறார். மெகஸ்தனிஸ், முட்டாள்தனத்தின் முடிவுக்கே சென்று, மத்ய தேசத்தில் இருந்தவனாக, கி. பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வராஹமிஹிரரால் உறுதி செய்யப்பெறும் பாண்டஸ் என்பான் அவ் வராஹமிஹிரரின் காலத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் மீது