பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

தமிழர் வரலாறு

லிபியா நாட்டு விலங்குகள், ஆண்டியோ சொஸ் (Antiochos) என்பானின் இந்தியப் படைகள் முன் நிற்க முடியவில்லை; (Warmington, Page: 151) -

இந்திய வேட்டை நாய்கள், வெளிநாட்டவரால், மிகுவிலைக்குரியவாக மதிக்கப்பட்டன. ஹொரோடோடஸ் கூற்றுப்படி, தம் காலத்தைச் சேர்ந்த பர்ஷியர், பாபிலோனியாவைச் சுற்றியிருந்த நான்கு பெரிய சிற்றுார்களின் வருவாய்களை, இந்திய வேட்டை நாய்களின் உணவிற்கு என்றே நிதிஒதுக்கம் செய்துவைத்தனர். பர்ஷியாவைச்சேர்ந்த இந்திய வேட்டை நாய்களும், அவை போலும் வேறு நாய்களும், தாலமி, பிலடெல்பாஸ் வெற்றி ஊர்வலத்தில் காணப்பட்டதாக, திரு. ஸ்டெசியாஸ் (Ctesias) குறிப்பிடுகிறார். கொடிய கரடியோடு நடத்திய போராட்டத்தில், தன் தலைவனைக் காப்பதற்காகத் தன் உயிரைக் கொடுத்த டவ்ரான் (Tawron) என்ற வேட்டை நாய் குறித்துப் பாடிய இரண்டு கையறு நிலைச் செய்யுள்கள் எழுதப்பட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் .சேர்ந்த,நாணற்புல்தாளினாலான கையெழுத்துப்படி ஒன்றும் கிடைத்துள்ளது'. (Warmington. Page : 149) தென் இந்திய வேட்டை நாய்கள், அவற்றின் முரட்டுத்தனத்திற்காகவே நன்கு தெரிந்திருந்தன. பொதுவாக அவை, கதநாய்' (கடுஞ்சின தாய், விரைந்தோடும் நாய்) என்றே அழைக்கப்படும். ('கத நாய்வடுகர்’ அகம் : 1.07:11) அவை, சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும். அவ்வாறு நாய் கட்டப்பட்டிருக்கும் வீட்டினுள் எவரும் எளிதில் புகஇயலாது. காவலில் அத்துணைக் கடுமையானது நாய். ('தொடர் படு ஞமலி புறம் : 743) தொடர் நாயாத்த துன்னரும் கடி நகர்’ (பெரும்பாணாற்றுப்படை. 125) தாம் குறித்துச் சென்ற பகைவர்களைத் தப்பாது வெற்றி கொள்ளவல்ல வீரர்களுக்குத், தான் குறித்த விலங்குகளைத் தப்பாது கொள்ளும் வேட்டை நாயை உவமை கூறுமளவு தென்னாட்டு: வேட்டை நாய்கள் சிறந்தனவாக மதிக்கப்பட்டன. 'செல் நா அன்ன கடுவிறல் சுற்றமொடு கேளாமன்னர் கடிபுலம் புக்கு (பெரும்பாண் ; 139-140) கரடி வேட்டையில்