பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

420

தமிழர் வரலாறு

அப்பாலையைக் கடந்து செல்லும் வழிப்போவார்க்கு உண்ணும் உணவாகும் கொடுமை மிக்க, வெப்பம் மிகுந்த அரிய வழி"


  • முகில் விரித்தன வெயில் அவிர் உருப்பின்

என்றுாழ் நீடிய குன்றத்துக் கவாஅன், ஒய்பகிச் செந்நாய், உயங்குமரை தொலைச்சி ஆர்ந்தன ஒழிந்த மிச்சில், சேய்நாட்டு அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் வெம்மை ஆரிடை’’ - நற்றிணை : 43:1-6

பாலை, தனக்கே உரிய இனிய அழகிய காட்சிகளைப் பெறாமலில்லை. "வளைந்த சிறகினை உடைய பறவைகளின் உள்ளங்கால் சுவடுகள் வரிசை வரிசையாகப் பொருந்திய, நீர் வற்றிய இடங்கள்தோறும் மெல்லிய நுண்மணல் படிந்து கிடக்க, மெல்லென வீசும் வாடைக்காற்று வறண்டு மோதியதால், கரும்பின் வெண்ணிறப்பூ, புதல் தோறும் ஒருசேர விரிந்து, அரசனுக்கு வீசப்படும் கவரிபோல் ஆடி அழகு செய்ய, கொண்டல் கொண்டலான மேகங்கள் நீங்கிச் செல்வதால், மாறி மாறிக் கண் விழித்துக் காட்டுவதுபோல், ஞாயிறு தோன்றித் தோன்றி மறைய, பகற் காலம் கழிய, மாலைப் பொழுதொடு இராக்காலம் வந்து சேர்தலும், பனி விழுந்து கால் கொள்ளும்".

"கொடும் சிறை

உள்ளடி பொறித்த வரியுடைத் தலைய நீர் அழி மருங்கின் ஈரயிர் தோன்ற வளரா வாடை உளர்புநனி தீண்டவின், வேழ வெண்பூ விரிவன பலவுடன் வேந்து வீசு கவரியின் பூம்புதல் அணிய, மழைகழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்து இமைப்பதுபோல் விளங்குபு மறைய