பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

தமிழர் வரலாறு

முரசுகளோடு, வெண்கொற்றக் குடைகளையும் கைக்கொண்டு, தன் வெற்றிப்புகழ் உலகெலாம் சென்று பரவும் வண்ணம், அவர்களையும், அவர்தம் படைவீரர்களையும் கொன்று, களவேள்வியும் செய்து முடித்த அந்நாள்."

"கொய்கயல் புரவிக், கொடித்தேர்ச் செழியன்,
ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
சேரல், செம்பியன், சினங்கெழு திதியன்,
போர்வல் யானைப், பொலம்பூண் எழினி,
நார்அரி நறவின் எருமை யூரன்,
தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்,
இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன், என்று
எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல்
முரசொடு, வெண்குடை அகப்படுத்து உரைசெலக்

கொன்று களம் வேட்ட".
-அகம் : 36, 13-32.

[இதுவும் மேலே கூறியவாறு ஒர் உவமையாகவே இடம் பெற்றுளது.]

இப்போர்க்கள நிகழ்ச்சிக்குப் பிறகு, அவன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டான்; அப்போர்க்கள நிகழ்ச்சிகளை, உவமைகளாக மேற்கொள்ளும் அளவிற்கு, அப்போர், அவன்காலப் புலவர்களைப் பெரிதும் கவர்ந்துவிட்டது. ஆலம்பேரி சாத்தனார் என்ற புலவர், காற்றென விரையும் நெடிய தேரினையும், வழங்கத் தவறா வண்மையினையும் உடைய, பாண்டியன் நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துப் போரை வென்று உயர்த்திய வேற்படை குறித்துப் புகழ்ந்து பேசுகிறார் :-

"காலியல் நெடுந்தோக், கைவண் செழியன்
ஆலங்கானத்து அமர்கடந்து உயர்த்த,

வேல்"
-அகம் 175 :10-12;