பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 தமிழர் வரலாறு

நீவந்தோங்கு மரபின் தோரண வாயிலும், பொன்னினும் மணியிலும் புனைந்தன வாயிலும், நுண்வினைக் கம்மியர் காணா மரபின துயர்நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு

மயன் விதித்துக் கொடுத்த மரபின இவைதாம் 

ஒருங்குடன் புணர்ந்து, ஆங்கு, உயர்ந்தோர் ஏத்தும் அரும்பெறல் மரபின் மண்டபம்’,

        -சிலம்பு : 5:89 - 110

அடிக்குறிப்பு:

(பரந்த இவ்வுலகில் எனும் பொருள்பட, மூலத்தில், "இருநில மருங்கின்" என்ற தொடர் வந்துளது. ஆனால், உரையாசிரியர், "இருநில மருங்கின்" என்றது மேற்கும், தெற்கும் எனக்கொள்க; என்றது, சேர, பாண்டியருடைய நாடுகளை’ என விளக்கம் அளித்துள்ளார். இது, வலிந்து கொண்ட பொருளாம்.) -

(இப்பகுதியில், கரிகாலன் என்ற பெயர் இடம் பெற வில்லை. ஆனால், திருமகள் அருள்பெற்ற சிறந்த சோழ மன்னன் எனப் பொருள்படும் திருமாவளவன் என்பதுதான் இடம் பெற்றுளது. பட்டினப்பாலையில், (299) கரிகாலனுக்கு, இச்சிறப்புப் பெயர்தான் கொடுக்கப்பட்டிருப்பதால், இதில் வரும் அத்தொடர் (திருமாவளவன்) கரிகாலனைக் குறிப்ப தாகக் கொள்ளலாம். 58ஆம் எண் புறநானூற்றுச் செய்யுளின் கொளு "அப்பாட்டு, ‘சோழன், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது" என்கிறது: அப்பெருந்திருமாவளன் யாவன், அப்பெருவழுதி யாவன் ஏன்பதை உணர்ந்த மூலத்தில் எதுவும் இல்லை; அவர்கள் உயிர் நீத்த இடங்கள் அவர்கள் இன்னார் என்பதை

உணர்த்தும் குறியீடாகக் கூறப்பட்டுள்ளமையால் அவர்கள்.