பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19. சிவனடியார் முழக்கம்[1]

காலைப் பொழுது; தேர் ஒடும் திருவீதியில் பெருமுழக்கம்: "திருத்தொண்டர் சங்கம்-வாழ்க! வாழ்க! "சிவனடியார் திருக்கூட்டம்-வெல்க! வெல்க!" "பசியின் கொடுமை-வீழ்க! வீழ்க!” என்று இரைந்து கொண்டு சென்றது ஒரு திருக்கூட்டம். இடையிடையே 'பம் பம்' என்று ஆயிரம் சங்குகள் சேர்ந்து ஒலித்தன.

அத்திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் பல்லாயிரவர், அவர்கள் கையிலே திருவோடு; மெய்யிலே திருநீறு, கழுத்திலே தாழ்வடம், இடுப்பிலே கந்தைத் துணி, அப்பண்டாரப் படையைப் பார்ப்பதற்கு ஊரெல்லாம் திரண்டு எழுந்தது.

ஊருக்கு மேற்கே ஒரு பூந்தோட்டம்; அங்கே போய்ச் சேர்ந்தது திருக்கூட்டம். தலைவர் கந்தரமூர்த்தி எழுந்து நின்றார். தொண்டர்கள் கைதட்டி ஆரவாரித்தனர். தலைவர் தலைவணங்கிப் பேசலுற்றார்:

"தோழர்களே! திருத்தொண்டர்களே! நெடுங்காலமாக தமது சங்கம் உறங்கிக் கிடந்தது. ஆயினும் இன்று விழித்துக்கொண்டோம்; ஒற்றுமைப் பட்டோம். திருத்தொண்டர் படை திரண்டு எழுந்துவிட்டது. இதைத் தடுக்க வல்லவர் இவ்வுலகில் உண்டோ? (ஒரு குரல்: 'இல்லை; இல்லை'. பலத்த ஆரவாரம்). 'தொண்டர்


  1. ஆனந்த விகடன், 1945 தீபாவளி மலரில் எழுதியது.