பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௧0. புலவர் (2)


சீவல்லபத் திருவள்
    ளுவரானார் என்றொருவர்
        செப்ப லுற்றார்!
நாவன்மை என்பதுவும்
    செந்தமிழை நலிப்பதற்கோ?
        நாணி லாரோ?
பாவளிக்கும் சுவைமுழுதும்
    பருகி விட்ட தாயுரைக்கும்
        ஒருவர் சொல்வார்:
கோவையிட்ட கம்பனது
    செய்யுளிலே முக்காலும்
        கோணல் என்றே! 46

கம்பனார் பதினோரா
    யிரம் பாட்டில் முக்காலும்
        கழித்துப் போட்டு
நம்பினால் நம்புங்கள்
    இவைதாம் கம்பன் செய்யுள்
        என அச் சிட்டு
வெம்புமா றளிக்கையிலும்
    மேவாத செயல் இதனைச்
        செய்ய இந்தக்
கொம்பன் யார் எனக் கேட்க
    ஆளில்லையா புலவர்
        கூட்டந் தன்னில் ? 47

“வாட்டங்கண்” ”கற்றரை”யை
    வாள்த்தடங்கண் கல்த்தரை என்
        றெழுதி முன்னைப்
பாட்டினிலே பெரும் பிழையைப்
    பல்குவிப்பா னுக்குமணிப்
        பண்டி தர்கள்
சாட்டை கொடுத் தறிக்கை விடத்
    தாள்ஒன்றும் அற்றதுவோ !
        தமக்குச் சோறு
போட்டிடுவார் ஒப்புகிலார்
    எனுங் கருத்தோ மானமற்ற
        போக்குத் தானோ! 48