பக்கம்:தமிழியக்கம், பாரதிதாசன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழியக்கம்

ஊர்திருடும் பார்ப்பா னும்
    உயர்வுடையான் எனக் குறிப்பார்
        திரவிடர் கொள்
சீர்குறித்துச் சீறிடுவார்
    சிறுமையுற வரைந்திடுவார்
        செய்யுந் தொண்டு
பார்திருத்த என்றிடுவார்
    பழமைக்கு மெருகிடுவார்
        நாட்டுக் கான
சீர்திருத்தம் என்றாலோ
    சிறுநரிபோல் சூழ்ச்சியினைச்
        செய்வார் நாளும்! 104

நடுநிலைமை இருப்பதில்லை
    நல்லொழுக்கம் சிறிதுமிலை
        தமிழை மாய்க்கும்
கெடுநினைப்பே மிகவுடையார்
    கீழ்மையிலே உடல்வளர்ப்பார்
        பொருள் படைத்தோன்
அடிநத்த நாணுகிலார்
    அறமொன்றும் கூறுகிலார்
         ஏழை யோரின்
மடிபறிக்கும் திறமுடையார்
    மறந்தேனும் திரவிடரை
         மதித்தல் இல்லார்! 105