பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 173 அதிகரிக்கின்றது. இயற்கையின் இரகசியம் புரிந்து கொள்ள முடியாத புதிராக இருப்பதைக் கண்டு இறும்பூது அடைகின்றோம். இரட்டைப்பிறவிகள் தோன்றுவதை ஈண்டு விளக்குவோம். இரட்டைப் பிறவிகள் இருவிதங்களில் உண்டாக்கலாம். (அ) ஒரு கரு இரட்டையர் idential tயins . இவ்வகையில் கருவுற்ற ஒரே முட்டையிலிருந்து இரண்டு குழந்தைகள் உண்டாகின்றன. கருவுற்ற முட்டை பிரிவுபட்டு உண்டான கருப்பத்தில் உள்ள உயிரணுக்களின் தொகுதி இரண்டு பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குழந்தையாக வளரும். ஏன் அஃது இவ்வாறு பிரிகின்றது என்பது இயற்கையன்னையின பல புதிர்களில் ஒன்றாகும். வளர்ச்சியின் முதல் நிலையில் எல்லா உயிரணுக்களுக்கும் குழந்தையின் எல்லாப் பகுதிகளாக வளரும். ஆற்றல் உண்டு. இவ்வாறு பிறக்கும் குழவிகளின் தோற்றம், தன்மை, உயரம், நிறம், உறுப்புகளின் அமைப்பு முதலிய மரபுவழிக் கூறுகள் அனைத்திலும் ஒரேமாதிரியாக இருக்கும். இரண்டும் ஆணாக இருக்கும்; அல்லது பெண்ணாக இருக்கும். அஃதாவது இவ்வகைக் குழவிக்களில் பால் வேற்றுமை இராது. கருப்பையில் வளரும்பொழுது இரண்டும ஒரே கோரியானால் (Chorion) மூடப்பெற்றிருக்கும். கருப்பந்தின் உட்புறத்தில் உயிரணுக்கள் ஒரு வரிசையாகவும் கருப்பந்துச் சுவருடன் சேர்ந்தும் அமையும் அமைப்பே கோரியான் என்பது. இவ்வமைப்பு தாயின் குருதியிலிருந்து உணவுச் சத்துகளைப் பெறுவதற்குத் துணை செய்கின்றது. மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனிப் பனிக்குடமும் (Amniotic sac) தனித்தனிக் கொப்பூழ்க் கொடியும் (Umbilical cord) இருக்கும். கொப்பூழ்க் கொடிகள் ஒரே நஞ்சுடன் (Placenta) இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய இரட்டைப் பிறவிகளை அச்சு இரட்டைகள் என்று வழங்குவதும் உண்டு. ஆர்க்காட்டு சகோதரர்கள் இதற்குச் சரியான எடுத்துக் காட்டுகளாவர். -