பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தமிழில் அறிவியல் செல்வம் இரண்டுகால்கள் ஒரு சிறிய வால் இவற்றுடன் பிறந்த ஒரு குழந்தை ஒராண்டுவரை வாழ்ந்து உயிர் துறந்ததாக அறிகின்றோம். இரட்டைப் பிறவிகள் ஏற்படுவது ஒரு மரபு வழிப் பண்பு என்று அறியக்கிடக்கின்றது. சில குடும்பங்களில் இப்பண்பு அடிக்கடித் தலைகாட்டுவதாக ஆராய்ச்சிகளால் அறிகின்றோம். ஒரே தாயிடம் தொடர்ந்தாற்போல் பல பிறவிகளையுடைய குழந்தைப் பேறு ஏற்படக் காண்கின்றோம். ஒர் ஆஸ்திரேலியப் புெண்மணி 69 குழவிகட்குத் தாயான செய்தியை அறிகின்றோம். அவள் நான்கு தடவைகள் நந்நான்கு குழந்தைகளையும், ஏழு தடவைகள் மும்மூன்று குழவிகளையும், பதினாறு தடவைகள் இரட்டைக் குழவி களையும் பெற்றெடுத்த தாக அறியக்கிடக்கின்றது. ஆயினும், பெண்ணின் செல்வாக்கு மட்டிலும் இப்பிறவிகளில் ஒரு முக்கிய கூறாக அமையவில்லை என்றும், ஆண் வழியாகவும் இக்கூறு அமைந்துள்ளதற்குச் சான்றுகள் உள்ளன என்றும் அறிகின்றோம். இரண்டு முறை திருமணம் புரிந்து கொண்ட ஒரு மனிதனுக்கு முறையே இரட்டைப் பிறவிகளும் மூன்று குழவிப் பிறவிகளும் அதிகமாக ஏற்பட்டதாகச் சான்று கிடைக்கின்றது. - - - புராணக் குசேலர் : நம் நாட்டுப் புராணக் குசேலருக்கு 27 குழந்தைகள் இருந்தன என்பதை இலக்கியம் மூலம் நாம் அறிகின்றோம். அக்குழவிகள் கஞ்சிக்காகப் பட்ட பாட்டை, ஒருமகவு களித்திடும்போ தொருமகவு - கைநீட்டும்; உந்திமேல் வீழ்ந்து இருமகவும் கைந்நீட்டும், மும்மகவும் கைநீட்டும் என்செய் வாளால்; பொருமியொரு மகவழும்,காண் பிழைந்தழும்,மற் றொருமகவு புரண்டு விழாப் பெருநிலத்திற் கிடந்தழும்மற் றொரு மகவுளங் வனம்சகிப்பாள் பெரிதும் பாவம்.