பக்கம்:தமிழ்க் காதல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அகத்திணை ஏழுவகைப்படும். கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை எனும் இவற்றுக்கு நால்வகை நிலப்பிரிவுகள் காரணங்கள் இல்லை. முத்திறக் காமத்தன்மைகளும் காரணங்கள் இல்லை; காதல் மாந்தரின் உரிப்பொருள் ஒழுக்கங்களே பால் ஒழுக்கங்கள் காரணங்கள் என்று தெளிவுபடுத்துகிறது.

  • அகத்திணையின் உயிர்நாடி உள்ளப்புணர்ச்சிகளவு, கற்புநெறிகள், அன்பின் - ஐந்திணைக்குரியன; காதற்களங்களின் விரிவுகளைக் கொண்டது. துறைவிரிவுகளை உடையது. ஐந்திணை கைக்கிளை, பெருந்திணைகள் துறைவிரிவுகள் அற்றவை என்று புலப்படுத்துவது.
  • ஐந்திணைக் காதல் அறம்சான்றது. உலகம் ஒப்புவது மக்கட்கு இயல்வது இலக்கியத்துக்கு இசைந்தது.அன்பின் ஐந்திணையைப் போல, கைக்கிளையும், பெருந்திணையும் விரித்துப்பாடும் இயல்பின அல்ல.
  • சங்க இலக்கியம் முழுதும் தேடினாலும், கைக்கிளைக்குக் கலித்தொகையில் மட்டும் 4 பாடல்கள் கிடைத்துள்ளன. இந்தக் கலித்தொகையில்தான் பெருந்திணைக்கும் 10 பாடல்கள் கிடைத்துள்ளன. இவற்றில் ஆண்பாற்கு 4; பெண்பாற்கு 6. இந்த அளவிற்குத் துறைச் சின்மைகளைக் கொண்டவை இவை என்று தெளிவுறுத்துகிறது.
  • ஓர் இனத்துக்குரிய பண்புதான். அந்த இனத்துக்கே உரிய இலக்கியப் பண்பாகவும் அமையும். காதற் கண்ணுடன் உலகியலை அணுகிய ஓர் இனம் தமிழினம் மட்டுமே. எனவேதான் அது அகத்திணை இலக்கியத்தைப் படைத்தது: உலகிற்களித்தது: என்று விளக்குவது. அகத்திணை உலகக் கண் கொண்டது. இது கூறும் காதல் உலக மனித இனத்திற்கே பொது: என்று பறை சாற்றுவது.
  • அன்பின் ஐந்திணை காதலின் இயல்பான வளர்கரு கைக்கிளை என்பது குறுங்கரு. சிறிய உறவு என்பது இதன் பொருள்; இது "ஒருதலைக் காமம்" என்னும் இழிந்த பொருள் உடையது அன்று. கைக்கிளை என்பது சொல் எதிர்பெறாமல் இளைஞன் எழுதும் ஒரு காதல் முன்னுரை. காதலின் தொடக்கம். ஒரு சிறிய பொழுதுக்குக் காதலைச் சுட்டும் ஒருமன நிலை.
  • பெருந்திணை என்பது பொருந்தாக் காமம் வலிந்த புணர்ச்சி: இழிநிலை உடையது. என்று இதுநாள் வரை கருதியும் எழுதியும் வந்தனர். இழிகாமம் பற்றியதாக இவை இருந்தால், இவற்றை ஒப்பற்ற அகத்திணை கண்ட தமிழ்இனம் அகத்திணை ஏழிற்குள் அடக்கியிருக்காது என்று மறுத்துத் தமிழ் அகத்திணை மரபில் - இது பற்றிய ஆய்வு மரபில் புதியவிளக்கம் தருவது. -
  • பெருந்திணை என்பது பெருகிய காமம் உடையது:நாணம் கடந்தது. கூனிக்கும் குறளனுக்கும் - குற்றேவலர்க்கும் உரிய இழிந்தது என்றெல்லாம் எழுதிவந்த பாவத்தைப் போக்குகிறது இந்நூல்.

கைக்கிளைபெருந்திணை குறித்து நெடிதுநாள் தொடர்ந்த கருத்துப் . பிழைகளை வ.சுப. மறுத்து முதன்முதல் புதுவிளக்கம் தந்துள்ளார். ஐந்திணைக் காதலரின் ஆராக் காம் உண்ர்வுதான் பெருந்திணை என்பர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/12&oldid=878779" இலிருந்து மீள்விக்கப்பட்டது