பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தமிழ்ப் பழமொழிகள்


எலி பூனைய வெல்லுமா?

எலி பெருத்தால் பெருச்சாளி ஆகுமா?

எலியாரைப் பூனையார் வாட்டினால் பூனையாரை நாயார் வாட்டுவார்.

எலியின் சிறங்கை சில தானியத்தால் நிரம்பும்.

(சிறங்கை-சிறு அங்கை.)

எலியும் பூனையும் இணைந்து விளையாடினது போல. 5315

எலியும் பூனையும் போல.

எலியைக் கண்டு பூனை ஏக்கம் அடையுமா?

எலியைக் கண்டு பூனை ஏங்கி ஏங்கிக் கிடக்குமோ?

எலியைத் தவற விட்ட பூனை போல.

எலியோ, பூனையோ சர சர என்கிறது; என்னடி சிறுக்கி பயமுறுத்துகிறாய்? 5320

எலி வளை ஆனாலும் தனி வளை வேண்டும்.

எலி வளையில் பாம்பு குடிபுகுந்தாற் போல.

எலி வீட்டைச் சுற்றுகிறது; விருந்தாளி பெண்டுகளைச் சுற்றுகிறான்.

எலி வீடு கட்டப் பாம்பு குடி கொள்ளும்.

எலி வெட்டிச் சோதிக்கிறாற் போல். 5325

எலி வேட்டை ஆடத் தவில் வேணுமா?

(வேட்டைக்குத் தவில் அடிப்பா?)

எலும்பு இல்லா நாக்கு எல்லாம் பேசும்.

(எல்லாப் பக்கமும் பேசும்; எப்படி வேண்டுமானாலும் பேசும்.)

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

எலும்பு கடிக்கிற நாய்க்குப் பருப்பும் சோறும் ஏன்?

எலும்பு ருசியை நாய்தான் அறியும்? 5330

எலும்பைக் கடிப்பானேன்? சொந்தப் பல்லும் போவானேன்?

(இருந்த பல்லும்.)

எலும்பைத் தின்று சதையைக் கொடுத்து வளர்த்தான்.

எலுமிச்சங் காய்க்குப் புளிப்பு ஏற்றுகிறது போல.

எலுமிச்சஞ் செடிக்கு எருப் போட்டாற் போல.

எலுமிச்சம் பழம் என்றால் தெரியாதா? இஞ்சி போலக் கசக்கும் என்றானாம். 5335