தமிழ்ப் பழமொழிகள்
67
அறிவார் அறிவார், ஆய்ந்தவர் அறிவார்.
அறிவிலே விளையுமா? எருவிலே விளையுமா?
அறிவினை ஊழே அடும். 1525
- (பழமொழி நானூறு.)
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
அறிவீனனிடத்தில் புத்தி கேளாதே.
அறிவு அற்றவனுக்கு ஆண்மை ஏது?
அறிவு அற்றவனுக்கு ஆர் சொன்னால் என்ன?
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்புவான். 1530
அறிவு இருந்தென்ன? அதிருஷ்டம் வேண்டும்.
அறிவு இல்லாச் சயனம் அம்பரத்திலும் இல்லை.
அறிவு இல்லாதவன் பெண்களிடத்திலும் தாழ்வு படுவான்.
அறிவு இல்லாதவனுக்கு வேலை ஓயாது. 1535
அறிவு இல்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவு இல்லார் தமக்கு ஆண்மையும் இல்லை.
அறிவு உடையார் ஆவது அறிவார்.
அறிவு உடையாரை அடுத்தால் போதும்.
அறிவு உடையாரை அரசனும் விரும்பும். 1540
- (வெற்றி வேற்கை.)
அறிவு உள்ளவனுக்கு அறிவது ஒன்று இல்லை.
அறிவு கெட்ட நாய்க்கு அவலும் சர்க்கரையுமா?
அறிவு கெட்டவனுக்கு ஆர் சொல்லியும் என்ன?
அறிவுடன் ஞானம்; அன்புடன் ஒழுக்கம்.
அறிவு தரும் வாயும் அன்பு உரைக்கும் நாவும். 1545
அறிவு புறம் போய் ஆடினது போல.
- (பி-ம்.) ஆண்டது போல.
அறிவு பெருத்தோன், அல்லல் பெருத்தோன்.
அறிவு மனத்தை அரிக்கும்.
அறிவு யார் அறிவார்? ஆய்ந்தவர் அறிவார்.
அறிவேன், அறிவேன், ஆல் இலை புளியிலை போல் இருக்கும் என்றானாம்.
அறுக்க ஊறும் பூம் பாளை, அணுக ஊறும் சிற்றின்பம். 1550
- (பி-ம்)உதவும்.
அறுக்க ஒரு யந்திரம்; அடிக்க ஒரு யந்திரம்.
அறுக்கத் தாலி இல்லை; சிரைக்க மயிரும் இல்லை.