88
தமிழ்ப் பழமொழிகள்
ஆடு கொடாத இடையன் ஆவைக் கொடுப்பானா?
ஆடு கொண்டவன் ஆடித் திரிவான்; கோழி கொண்டவன் கூவித் திரிவான்.
ஆடு கொண்டு உழுது ஆனை கொண்டு போர் அடித்தாற் போல் இருக்கிறது.
ஆடு கொழுக்கக் கொழுக்கக் கோனானுக்குச் சந்தோஷம்.
ஆடு கொழுக்கிறது எல்லாம் இடையனுக்கு லாபம். 2030
- (பா-ம்.) இடையனுக்குத் தானே?
ஆடு கொழுத்தால் என்ன? ஆனை கட்டி வாழ்ந்தால் என்ன?
ஆடு கொழுத்தால் ரோமத்தில் தெரியும்.
ஆடு கோழி ஆகாது; மீன் கருவாடு ஆகும்.
ஆடு கோனான் இன்றித் தானாய்ப் போகுமா?
ஆடு தழை மேய்ந்தாற் போல. 2035
- (பா-ம்.) தின்பது போல.
ஆடுதன் துருப்புச் சொல்லி ஆர் வாழ்ந்தார் அம்மானை?
ஆடுதன் துருப்புச் சொன்னால் அடிப்பது டைமன் தானே?
ஆடுதன் ராஜா மாதிரி.
ஆடு திருடிய கள்ளன் போல விழிக்கிறான்.
ஆடு திருடுகிற கள்ளனுக்கு ஆக்கிப் போடுகிறவள் கள்ளி. 2040
ஆடு தின்பாளாம், ஆட்டைக் கண்டால் சீசீ என்பாளாம்.
- (பா-ம்.) இரண்டு ஆடு தின்பாளாம்.
ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.
- {பா-ம்.) கோனாய்.
ஆடு நனைகிறதென்று தோண்டான் அழுகிறதாம்.
ஆடு நினைத்த இடத்தில் பட்டி போடுகிறதா?
ஆடு பகை, குட்டி உறவா? 2045
ஆடு பட்டியிலே இருக்கும் போதே கோசம் தன்னது என்கிறான்.
ஆடு பயிர் காட்டும்; ஆவாரை நெல் காட்டும்.
ஆடு பிடிக்கக் கரடி அகப்பட்டது போல்.
ஆடு பிடிக்கப்போய் ஓநாயிடம் அகப்பட்டுக் கொண்டது போல்.
ஆடு பிழைத்தால் மயிர்தானும் கொடான். 2050
- (பா-ம்.) கொடேன்.
ஆடு போல் சாப்பிட வேண்டும்; ஆனைபோல் குளிக்க வேண்டும்.
ஆடும்காலத்தில் தலைகீழாக நடந்தால் ஓடும் கப்பறையும் ஆவான்.