94
தமிழ்ப் பழமொழிகள்
ஆணிக்கு இணங்கின பொன்னும் மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை.
ஆணுக்குக் கேடு செய்தாலும் பெண்ணுக்குப் பிழை செய்தல் ஆகாது. 2170
ஆணுக்குப் பெண் அழகு.
ஆணுக்குப் பெண் அஸ்தமித்துப் போச்சா?
ஆணுக்கு மீசை அழகு; ஆனைக்குத் தந்தம் அழகு.
ஆணும் அவலம்; பெண்ணும் பேரவலம்.
ஆணை அடித்து வளர்; பெண்ணைப் போற்றி வளர். 2175
- (பா-ம்.) பிடித்து வளர்; தட்டி வளர்.
ஆணையும் வேண்டாம்; சத்தியமும் வேண்டாம்; துணியைப் போட்டுத் தாண்டு.
- (பா-ம்.) சந்தியும் வேண்டாம்.
ஆத்தாடி நீலியடி, ஆயிரம் பேரைக் கொன்றவன்டி,
- (நீலி-ஔரி; அது மருந்தை முறிக்கும்.)
ஆத்தாள் அம்மணம்; அன்றாடம் கோதானம்.
ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
- (பா-ம்.) அன்றாடம் வீட்டில் கோதானம்.
ஆத்தாள் என்றால் சும்மா இருப்பான்; அக்காள் என்றால் மீசைமேல் கை போட்டுச் சண்டைக்கு வருவான். 2180
ஆத்தாள் படுகிற பாட்டுக்குள்ளே மகள் மோருக்கு அழுகிறாள்.
ஆத்தாள் வீட்டுப் பெருமை அண்ணன் தம்பியோடே சொல்லிக் கொண்டாளாம்.
ஆத்தாளும் மகளும் காத்தானுக்கு அடைக்கலம்; அவன் காத்தாலும் காத்தான்; கை விட்டாலும் விட்டான்.
ஆத்தாளை அக்காளைப் பேசுகிறதில் கோபம் இல்லை; அகமுடையாளைப் பேசுகிறதற்குத்தான் கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது.
ஆத்தாளோடு போகிறவனுக்கு அக்காள் எது? தங்கச்சி ஏது? 2185
ஆத்தி நார் கிழித்தாற்போல் உன்னைக் கிழிக்கிறேன்.