தமிழ்ப் பழமொழிகள்
149
குல்லாய்க்கார நவாபு, செல்லாது உன் ஜவாபு.
குல்லாய்க்குத் தலையா? தலைக்குக் குல்லாயா?
குல்லாய் போடப் பார்க்கிறான்.
குல்லாயை எடு என்றால் முல்லாவை அழைத்த கதை,
குலத்தனவே ஆகும் குணம். 9015
குலத்திலே குரங்கைக் கொள்.
குலத்திலே முளைத்த கொடி என்ன கொடி? கற்பிலே மலர்ந்த பெண் கொடி.
குலத்துக்கு ஈனம் கோடாரிக் காம்பு.
குலத்துக்கு ஏற்ற குணம்.
குலத்துக்கு ஏற்ற பெண்; நிலத்துக்கு ஏற்ற நெல். 9020
குலத்துக்கு ஏற்ற பேச்சு.
குலத்தைக் கெடுக்கவந்த கோடாரி. குலத்தைக் கெடுக்குமாம் குரங்கு.
குலம் எப்படியோ, குணமும் அப்படியே.
குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே. 9025
குலம் குலத்தோடு; வெள்ளம் ஆற்றோடு.
குலம் குலத்தோடே, வெள்ளாடு தன்னோடே.
குலம் புகுந்தும் குறை தீரவில்லை.
- (குறையா?)
குலமகட்கு அழகு கொழுநனைப் பேணுதல்.
குலமகன் குலத்துக்கு அழுவான்; மூக்கறையன் மூக்குக்கு அழுவான். 9030
குலமும் ஒன்று; குறியும் ஒன்று.
குல வித்தை கல்லாமற் பாகம் படும்.
- (பழமொழி நானுாறு. )
குல வித்தை கற்றுப் பாதி; கல்லாமற் பாதி.
குலஸ்தீரீ தன் பர்த்தாவையும் பரஸ்திரீ தன் மேனியையும் பேணுவாள்.
- (தன் கணவனையும்.)
குலாசாரத்தைக் குழிக்கறி ஆக்கி மதாசாரத்தின் வாயில் மண் அடிக்க வேண்டும். 9035
- (மண் அடிக்கிறது.)