தமிழ்ப் பழமொழிகள்
195
கோல் பிடித்த பிள்ளை குரங்கு.
கோல் பிடித்தவன் கோமான்: தண்டம் பிடித்தவன் தண்டல்காரன்.
கோலச் சமத்தி, கோலச் சமத்தி என்றாளாம்: அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம். 10015
கோவணத்தில் இடி விழுந்தது என்றாளாம்.
கோவணத்தில் ஒரு பணம் இருந்தால் கோழி கூப்பிடும் வேளையில் ஒரு பாட்டு வரும்:
- (ஒரு காசு கோழி கூப்பிடும் போதே.)
கோவணத்தில் முக்கால் துட்டு இருந்தால் கோழி கூப்பிடப்பாட்டு வரும்.
- (காசு இருந்தால்.)
கோவணத்துக்கு மிஞ்சின தரித்திரம் இல்லை.
கோவணத்தை அவிழ்த்து மேற்கட்டுக் கட்டுகிறது. 10020
கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
கோவணம் பீயைத் தாங்குமா?
கோவணாண்டிக்குக் குடித்தனம் பெருத்ததுபோல.
- (யாழ்ப்பாண வழக்கு.)
கோவணாண்டி துணிவிலும் கோடிச் சீமான் துணிவா.
- (துணிவு)
கோவிந்தா என்றால் கோடி ஸ்நானம் என்று குளிக்காமல் முழுகாமல் இருக்கலாமா? 10025
கோவில் ஆனை கல் ஆனை.
கோவில் இடிக்கத் துணித்தவனா குளம் வெட்டப் போகிறான்?
- (குளம் கட்ட)
கோவில் உண்டைச் சோறு குமட்டின தேவடியாள் குத்துமித் தவிட்டுக்குக் கூத்தாடுகிறாள்.
கோவில் கட்டி அல்லவா விளக்குப் போடவேண்டும்?
கோவில் கட்டிக் குச்சு நாயைக் காவல்; மாடி வீட்டைக் கட்டி மரநாயைக் காவல். 10030
கோவில் கல்லைப் பிடுங்கப் போகிறான்.
கோவில் காளை போலத் திரிகிறான்.
கோவில் குளம் போகாத கோபி சாஸ்திரி; கன்னி குளம் போகாத கன்யா சாஸ்திரி.