பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தமிழ்ப் பழமொழிகள்



நல்லாரை நாவு அழியப் பேசினால் பல்லாலே பதக்குப் புழுச் சொரியும்.

நல்லுடலுக்கு இளைப்பாற்றிக் கொடாவிடினும் நாவிற்குக் கொடு.

நல்லெருமை நாகு; நற்பசு சேங்கன்று; அடியாள் பெண்பெற. 13780

(இடையர் வழக்கு.)


நல்லோர்க்குப் பொறுமையே துணை.

நல்லோர் நடத்தை தீயோருக்குத் திகில்.

நல்லோரை ஏசினால் நாவு புழுக்கும்.

நல்லோரை நாடு அறியும்; பொன்னை நெருப்பு அறியும்.

நல்லோரை நாவில் உரை; பொன்னைக் கல்லில் உரை. 13785


நல்லோன் என வளர்.

நலம் உள்ளோன் கவலை தீர்க்க, நமக்கு அந்தக் கவலை ஏற்க நல்லது.

நவாபு அத்தனை ஏழை; புலி அத்தனை சாது.

நவாபு தர்பார்.

நவாபு நா அசைந்தால் நாடு அசையும்; பக்கிரி நாடு அசைந்தால் மோவாய்க் கட்டைதான் அசையும். 13790


நழுவ முடிந்தால் நம்பாதே.

நழுவப் போகிறவனைத் தழுவிப் பிடிக்கிறதா?

நளபாகம் பீமபாகம் போல.

நற்குணமே நல்ல ஆஸ்தி.

நற்சிங்கத்துக்கு நாயா முடி சூட்டுகிறது. 13795


நற் பெண்டாட்டிக்கு ஒரு சொல்.

நற் பெண்டிர் நல்லதைக் கண்டால் நமது நாயகனுக்கு என்பார்.

நற் பெண்டுக்கு ஒரு சொல்; நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.

நற் பெயரே பணத்தை விட மேலானது.

நறுக்குத் தெறித்தாற் போல நாலு வார்த்தை பேசு. 13800


நறுவிலிப்பழம் திருத்தினாற் போல.

நன்செய்க்கு ஏர் உழவு; புன்செய்க்கு நால் உழவு.

நன் பொருள் கொடுத்தும் நன்றாய் ஓது.

நன்மை ஆனதைக் கொடுத்தால் நஷ்டத்திலும் நஷ்டம்.

நன்மை கடைப்பிடி. 13805


நன்மை செய்தார் நன்மை பெறுவார்? தீமை செய்தார் தீமை பெறுவார்.

(தின்மை.)

நன்மை செய்திடில் நாலு இடையூறும் வரும்.