பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

177



பட்டினியே சிறந்த மருந்து.

பட்டு அறி; கெட்டு அறி; பத்தெட்டு இறுத்து அறி.

(பத்தும் எட்டும் அறி.)

பட்டுக் கத்தரித்தது போலப் பேச வேண்டும்.

பட்டுக் கிடக்கிற பாட்டிலே கட்டிக் கொண்டு அழ முடிய வில்லையாம், கற்றாழை நாற்றம்.

பட்டுக் கிடப்பானுக்கு வாழ்க்கைப் பட்ட நாள்முதல் நெட்டோட்டம் ஒழியக் குச்சோட்டம் இல்லை. 15265


பட்டுக் கிழிந்தால் தாங்காது; பங்கரைக்கு வாழ்வு வந்தால் நிற்காது.

பட்டுக்கு அழுவார், பணிக்கு அழுவார்; வையகத்தில் பாக்குக்கு அழுத பாபத்தைக் கண்டதில்லை.

(பாரதத்தை.)

பட்டுக் குலைந்தால் பொட்டு.

பட்டுக் கோட்டைக்கு வழி எது என்றால், கொட்டைப் பாக்குப் பணத்துக்குப் பத்து என்றாளாம்.

(நூறு பணம் என்றாளாம்.)

பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை என்ன என்றான். 15270


பட்டு நூல் தலை கெட்டாற் போல.

பட்டு நூலுக்குள்ளே சிக்கெல்லாம் இருக்கிறது.

பட்டுப் புடைவை இரவல் கொடுத்ததும் அல்லாமல் பாயையும் தூக்கிக் கொண்டு அலையலாயிற்று.

(பலகையையும் தூக்கிக் கொண்டு அலைந்தது போல.)

பட்டுப் புடைவை இரவல் கொடுத்து மணையை எடுத்துக் கொண்டுதிரிவது போல.

பட்டுப் புடைவை கொடுத்துத் தடுக்கும் போடுகிறதா? 15275


பட்டுப் புடைவையில் ஊசி தட்டுகுவிப் பாய்ந்தாற் போல.

பட்டும் ஒன்று, பழுக்காயும் ஒன்றா?

பட்டும் பட்டாவளியும் பெட்டியில் இருக்கும்? காற்காசுக் கந்தை ஓடி உலாவும்.

(பட்டாடையும், ஒரு காசு.)

பட்டும் பாழ்; நட்டும் சாவி.

பட்டு மட்கினாலும் பெட்டியிலே. 15280

(மட்கினால்.)