பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தமிழ்ப் பழமொழிகள்



பறை தட்டினாற் போல.

பறைந்த வாயும் கிழிந்த சீலையும் கிடவா.

(யாழ்ப்பாண வழக்கு.)

பறைப்பாட்டுக்கும் பறைப் பேச்சுக்கும் சுரைப் பூவுக்கும் மணம் இல்லை.

பறைப் பிள்ளையைக் கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்தில் வைத்தாலும் அணை என்கிற புத்தி போகாது.

(எதற்கும் அணை என்பதைச் சேர்த்துப் பேசுவார்கள். கொங்கு நாட்டு வழக்கு.)

பறைப் புத்தி அரைப் புத்தி. 15785


பறைப் பூசம்.

பறையரிலே சிவத்தவனையும் பார்ப்பானிலே கறுத்தவனையும் நம்பக் கூடாது.

பறையன் பாக்குத் தின்பதும் பறைச்சி மஞ்சள் குளிப்பதும் அறிப்பும் பறிப்பும் மட்டும்.

பறையன் பொங்கல் போட்டால் பகவானுக்கு ஏலாதோ?

(ஏறாதோ?)

பறையன் வளர்த்த கோழியும் பார்ப்பான் வளர்த்த வாழையும் உருப்படா. 15790


பறையன் வீட்டில் பால் சோறு ஆக்கி என்ன? நெய்ச் சோறு ஆக்கி என்ன?

பறையனுக்குக் கல்யாணமாம்; பாதி ராத்திரியிலே வாண வேடிக்கையாம்.

பறையனுக்குப் பட்டால் தெரியும்; நண்டுக்குச் சுட்டால் தெரியும்.

பறையனுக்கு வரிசை வந்தால் பாதி ராத்திரியிலே குடை பிடிப்பான்.

பறையனுக்கு வள்ளுவன் பாதிச் சைவன். 15795


பறையனும் பார்ப்பானும் போல,

பறையனை நம்பு; பார்ப்பானை நம்பாதே.

பறையனைப் போல் பாடுபட்டுப் பார்ப்பானைப் போல் சாப்பிட வேண்டும்.

பறையைப் பள்ளிக்கு வைத்தாலும் துறைப் பேச்சுப் போகுமா?

பறை வேலை அரை வேலை. 15800


பன்றிக் குட்டி ஆனை ஆகுமா?

பன்றிக் குட்டிக்கு ஒரு சந்தி ஏது?