பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231

பீ


பீக்கு முந்தின குசுப் போல.

பீச்சண்டை பெருஞ்சண்டை.

பீடம் தெரியாமல் சாமி ஆடினது போல. 16560


பீடு படைத்தவன் கோடியில் ஒருவன்.

பீதாம்பரத்துக்கு உண்டு ஆடம்பரச் செய்கை.

பீ தின்கிறது போலக் கனவு கண்டால் பொழுது விடிந்தால் யாருக்குச் சொல்கிறது?

பீ தின்கிறவன் வீட்டுக்குப் போனால் பொழுது விடியுமட்டும் பேளச் சொல்லி அடித்தானாம்.

பீ தின்னப் போயும் வயிற்றுவலிக்காரன் பீயா? 16565


பீ தின்ன வந்த நாய் பிட்டத்தைக் கடிக்கப் போகிறதா?

பீ தின்ன வேண்டுமென்றால் வாயை நன்றாய்க் கழுவிப் போட வேண்டும்.

பீ தின்னுகிற நாய்க்குப் பேர் முத்துமாலை.

பீ தின்னும் வாயைத் துடைத்தது போல.

பீ போடப் புறக்கடையும் பிணம் போட வாசலும். 16570


பீ போனால் பலம் போச்சு.

பீ மேலே நிற்கிறாற் போல.

பீயிலே கல விட்டு எறிந்தால் மேலேதான் தெறிக்கும்.

பீயிலே தம்படி இருந்தாலும் பெருமாளுக்குத் தளிகை போடுவான்.

பீயும் சோறும் தின்கிறதா? ஈயும் தண்ணீரும் குடிக்கவா? 16575


பீயும் சோறும் பிசைந்து தின்கிறான்.

(சோறு மாய்ப் பிசைகிறது.)

பீயும் பிள்ளையும் பிடித்ததைப் பிடிக்கும்.

பீயைப் பெரிதாய் எண்ணிப் பொய்க்காமல் வேடு கட்டுவானேன்,

(வேலி.)