பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

317


பட்ட நாடாகும். அதனால் இடைக்காழி நாடு எனப்பட்டது. அந்நாட்டில் நல்லூர் என்னும் ஊர் இன்றும் இருக்கின்றது. ஓய்மானாடு என்பது திண்டிவனம் வட்டத்தின் பெரும்பகுதியும், விழுப்புரம் வட்டத்தின் கிழக்குப் பகுதியும் மதுராந்தகம் வட்டத்தின் தென்கோடிப் பகுதியும் சேர்ந்த நிலப் பரப்பாகும். இத்நாட்டுக்குத் தலைநகர் கிடங்கில் என்பது. இப்பண்டை நகரம் இன்றுள்ள திண்டிவனத்தின் பெரும் பகுதியாயிருந்தது,

இப்பாட்டில் மாவிலங்கை, எயில்பட்டினம் என்ற நகரங்களைப் பற்றிய செய்திகள், விறலியின் வருணனை, சேர சோழ பாண்டியர் தலைநகரங்களின் சிறப்பு, உமணர் செயல்கள், நல்லியக்கோடனுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த பாரி பேகன் முதலிய வள்ளல்கள் எழுவரின் அரிய செயல்கள், நல்லியக்கோடனது வீரம், சிறுபாணனுடைய வறுமை நிலை, நெய்தல் நில இயல்பு, அதனை அடுத்த எயிற்பட்டினத்துப் பரதவர் வாழ்க்கை, முல்லை நில இயல்பு, அதனைச் சார்ந்த வேலூர் எயிற்றியர் விருந்தினரைப் பேணும் முறை, மருதநில இயல்பு. அதனைச்சேர்ந்த ஆமூர் உழவர் மகளிர் உபசரிப்பு, நல்லியக்கோடனுடைய நற்பண்புகள், அவன் பாணனை வரவேற்றுப் பரிசில் நல்கும் அருமை ஆகிய செய்திகள் கூறப்பட்டுள்ளன,

4. பெரும்பாண் ஆற்றுப்படை: ஐந்நூறு அடிகளைக் கொண்ட இந்நெடும்பாட்டு, காஞ்சி நகர மன்னனான தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசு பெற்ற பெரும்பாணன் ஒருவன் பரிசில் பெற விரும்பிய மற்றொரு பெரும் பாணனை அத்தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்தியதாகப் பாடப்பட்டது. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்பவர். சிறிய யாழை வைத்திருந்தவன் சிறுபாணன் என்று அழைக்கப்பட்டாற் போலப் பெரிய யாழை இசைத்தவள் பெரும்பாணன் எனப்பட்டான்.

இப்பாட்டில் யாழின் வருணனை, இளந்திரையன் ஆட்சிச்சிறப்பு, உப்பு வாணிகர் இயல்பு, நாட்டு வழிகளைக்