பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

193



யான தமிழ் அறிஞர்களைப் பொறுத்தவரையில் ‘தாம் ஆடாவிடினும் தம் தசை ஆடுவது’ உறுதி.

பொறை என்னும் சொற்குப் பொருள் கூறும் வாயிலாக ஆசிரியர் அம்பல் சேந்தனது பொறுமையைப் புகழ்ந்துளார்:

“மலை, சுமை, பாரம், அம்பல் சேந்தனோடு
உலவிய பொறுமை, பார், ஐந்தும் பொறையே,”

பொறுமைக்கு எடுத்துக் காட்டாகச் சேந்தன் சிறப்பிக்கப்பெற்றுள்ளான்.

இந்தப் பதினோராந் தொகுதி, இக்காலத்துப் பயன்படுத்தப்படுகிற ‘டிக்க்ஷனரி’ எனப்படும் அகராதியைப் போன்றதாதலின், அக்காலத்து மக்கள் இத் தொகுதியையே பெருவாரியாகப் பயின்றனர்—மனப்பாடமும் செய்துவைத்துக் கொண்டனர். நிகண்டு கற்றவர் என்னும் பெயருக்கு உரியவர் மட்டுமல்லர்—பொதுவாகப் படித்தவர் என்னும் பெயருக்கு உரியவர் அனைவருமே, நிகண்டு நூலிலுள்ள மற்ற தொகுதிகளைக் கற்றாலும் கற்காவிடினும், பதினோராந் தொகுதியாவது கட்டாயம் கற்றேயிருந்தனர். பதினோராந் தொகுதியைப் பதினோராம் நிகண்டு எனத் தனி நிகண்டு நூல் போல் குறிப்பிடும் வழக்கமும் அன்று இருந்தது. இதிலிருந்து, இத்தொகுதியின் இன்றியமையாமையும் பரந்த பயனும் நன்கு புலப்படும்.