பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

251

251

இதோ அந்தப் பாடல்:

' படைமயக் குற்ற போதும்

படைமடம் ஒன்றி லாதான்

மடைசெறி கடகத் தோளான்

மதிக்குடை மன்னர் மன்னன்

கெடிமன்னர் வணங்குந் தாளான் கிருட்டிண ராயன் கைபோல்

கொடைமடம் என்று சொல்ப

வரையாது கொடுத்த லாமே.”

இந்தப் பாடலில் கூறப்பட்டுள்ள கிருட்டிண ராயன் எந்தக் கிருட்டிண ராயன் என முடிவு கட்டுவது எளிதன்று. இந்தப் பெயரில் பல மன்னர்கள் இருந்த தாகத் தெரிகிறது. விசயநகரம் ஆண்டவர் ஒருவர்தொண்டை மண்டலத்துச் சிற்றரசர் ஒருவர்- இரண் டாம் விக்கிரமாதித்தச் சோழனுக்கு கட்பரசர் ஒருவர்இராட்டிர கூடத்தை ஆண்டவர் ஒருவர் - செஞ்சியை ஆண்டவர் ஒருவர் - இப்படியாக இந்தப் பெயரில் பல மன்னர்கள் கூறப்படுகின்றனர். மண்டலபுருடரை ஆதரித்தமையால் சூடாமணியில் நன்றி பாராட்டப் பட்டுள்ள மன்னர் இவர்களுள் யாரோ ?

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி யின் பதிப்பாசிரியர், மண்டல புருடர் பதினரும் நூற்ருண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் என்றும், ஒரு தோற்றம் கி. பி. 1520-ஆம் ஆண்டு வாக்கில் சூடாமணி நிகண்டு தோன்றி யிருக்கலாம் என்றும் கூறியுள்ளார். அப்படியென் ருல் பதிருைம் நூற்ருண் டில் விசயககரத்தில் அரசு செலுத்திய இராயர்’ காலத்தவராகக் கொள்ளல் வேண்டும்.

16