427
427
தமிழ்ப் புலவர் அகராதி (கந்தையா)
(புலவர் அகர வரிசை ) இதில், அகத்தியர் முதல் வையாபுரி முதலியார் ஈறாகப் பல தமிழ்ப் புலவர்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் ந. சி. கந்தையா பிள்ளை . காலம் 1952.
தமிழ் இலக்கிய அகராதி (கந்தையா)
(இலக்கிய அகர வரிசை ) இதில், அகத்தியம் முதல் வைராக்கிய தீபம் ஈறாகப் பல தமிழ் இலக்கியங்களைப் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் ஆசிரியரும் ந.சி. கந்தையா பிள்ளையே. ஆண்டு 1952.
திருக்குறள் சொல்லடைவு இந்த அரிய படைப்பின் ஆசிரியர் சாமி. வேலா யுதம் பிள்ளையவர்கள், வெளியீடு மொழியரசிப் பதிப் பகம் ; காலம் 1952- ஆம் ஆண்டு .
இவ்வெளியீட்டில், திருக்குறள் முழுவதிலும் உள்ள எல்லாச் சொற்களும் அகரவரிசைப் படுத்தப் பட்டு, திருவள்ளுவரால் இன்னின்ன பொருளில் கை யாளப் பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு சொல்லை எடுத்துக்கொண்டு, அது இத்தனை யாவது - இத்தனையாவது குறள்களில் வந்துள்ளது எனக் குறள்களின் எண்களையும், அவ்வக் குறள்களில் அச்சொல் தரும் பொருள்களையும் ஆசிரியர் வேலாயுதம் பிள்ளை அழகாக அறிவித்துள்ளார். சுருக்கக் குறியீடுகள் பலவும் தந்துள்ளார்.
27