பக்கம்:தமிழ் அங்காடி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  181



அப்படியா கதை இன்றைக்கு வீட்டில் சேகருக்குப் பிறந்தநாள் விழா நடக்கிறதே உங்களை அழைக்க வில்லையா?

அழைக்கவில்லை. அழைக்க விடமாட்டாள் பர்வதம். இந்தப் பேரனுக்கும் இன்றைக்குத்தான் பிறந்தநாள்.

அப்படியா! உண்மையான வீட்டுப் பேரன் இங்கே சாகக் கிடக்கிறான். அங்கே யார் வீட்டுப் பிள்ளைக்கோ ஆரவாரமாகப் பிறந்தநாள் விழா நடக்கிறதே! என்ன உலகம் இது!

இவ்வாறு பேசிக் கொண்டே இவர்கள் மருத்துவ மனையை அடைந்ததும், பையன் மணியன் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தார்கள்,

அன்றைய நாள் மணியனுக்கு இறந்த நாள் மட்டும் அன்று - அவனுக்குப் பிறந்த நாளும் அன்றைய நாளே அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/183&oldid=1204302" இலிருந்து மீள்விக்கப்பட்டது