பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கடைச்சங்க வீழ்ச்சிக்குக் காரணம் 13 என்னும் புறநானூற்றுப் பாடலில் தெளிவாக விளக்கியிருப்ப தோடு ஆசிரியர் திருவள்ளுவனாரது திருக்குறளை அறநூல் என்று பாராட்டியிருப்பதும் - உணரற்பாலதாம். நல்லிசைப் புலமை மெல்லியல் நங்கையாராகிய காக்கைபாடினியார் நச்செள்ளையார் தாம் பாடியுள்ள ' நரம்பெழுந்துலறிய நிரம்பா மென்றோள் ' 1 என்று தொடங்கும் புறநானூற்றுப் பாடலின் இறுதியிலுள்ள ' ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே ' என்ற சொற்றொடரை ' ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் '2 என்னுங் குறள் வெண் பாவைக் கருத்திற்கொண்டு அமைத்திருத்தல் அறிந்து கோடற் குரியது. இதுகாறும் விளக்கியவாற்றால் கடைச்சங்கப் புலவர்கள் திருக்குறளை நன்கு பயின்றவர்கள் என்பது தெள்ளிதிற் புலப் படுதல் காண்க. ஆகவே, கடைச்சங்கத்தின் இறுதிக்காலத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருக்குறள் என்னும் ஒப்புயர் வற்ற நூல் அதன் ஆசிரியரால் இயற்றப் பெற்றிருத்தல் வேண்டும் என்பது திண்ணம். எனவே, அந்நூல் அரங்கேற்றப் பட்ட நாளில் கடைச்சங்கம் அழிவுற்றது என்றுரைப்பது எவ் வாற்றானும் பொருந்தாது. திருக்குறளுக்கு மதிப்புரையாகவுள்ள திருவள்ளுவமாலையில் காணப்படும் வெண்பாக்கள் எல்லாம் அந் நூல் அரங்கேற்றப்பட்டபோது சங்கப் புலவர்களால் இயற்றப் பெற்றவையல்ல. அவற்றைப் பாடிய புலவர்களுள் பலருடைய பெயர்கள் சங்கத் தொகை நூல்களில் காணப்படாமை அறியத் தக்கது. அப் பாடல்களுள் பல, சங்கப்புலவர்களின் வாக்கு என்பதற்கேற்றவாறு அத்துணைச் சிறப்பும், பொருளமைதியும் உடையனவாகக் காணப்படவில்லை. எனவே, அப்பாடல்களின் துணைகொண்டு திருக்குறள் கடைச்சங்கத்தில் அதன் இறுதிக் காலத்தில் அரங்கேற்றப்பட்டதென்று கூறுவதற்குச் சிறிதும் இடமில்லை. ஆகவே, அந்நூலின் அரங்கேற்றத்தால் கடைச் 1. புறம். 278. 2. திருக்குறள், புதல்வரைப் பெறுதல், 9.