இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3. திருமுருகாற்றுப்படை . 19
பேருடைய உள்ளங்களிலும் முருகுணர்ச்சி ஊடுருவி நிற் கிறது. -
முருகன்கோயிலிலும் இருக்கிறான்; கோயில் இல்லாத இடங்களிலும் இருக்கிறான். அவனுடைய திருவுருவம், வீரச்செயல், கருணைத்திறன், வரலாறு ஆகியவற்றை இந்நூல் சொல்கிறது. -
இயற்கை வருணனையைச் சொல்லோவியமாகக் காட்டும் பகுதிகள். சில.
பத்துப்பாட்டில் முதல் பாட்டாகக் கோக்கப்பெற்ற திருமுருகாற்றுப்படை பதினோராந் திருமுறையிலும் சேர்ந்து விளங்குகிறது. இலக்கியச் சுவை மிக்கதாகை யால் பத்துப்பாட்டிலும், முருகனது புகழைக் கூறுவதா
தலின் திருமுறைகளிலும் இடம் பெற்று நிற்கிறது.
இதற்குப் புலவராற்றுப்படை என்ற பெயரும் உண்டு. இதைப் பல அன்பர்கள் நாள்தோறும் பாரா யணம் செய்து நலம் பெற்று வருகிறார்கள். .