பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 9 தமிழ் முழக்கம் 9

அம்புவியிற் காணும் அதுவே இயற்கைவிதி: நாட்டினை உய்விக்க நாடி எழும்வீரர் கேட்டினைக் கண்டஞ்சார் கேடெல்லாம் பூமாலை; பூட்டுஞ் சிறைச்சாலை பூஞ்சோலை யாகிவிடும்: தீட்டுங் கொலைக்கருவி தேன்மலரா மாறிவிடும்; நச்சருந்தச் சொன்னாலும் செக்கிழுக்கச் சொன்னாலும் அச்சம் அவர்க்கில்லை ஆண்மையுடன் முன்னிற்பர்: 80 கொள்கை உடையானைக் கொண்ட குறிக்கோளில் உள்ளம் உடையானை ஊராள்வோர் தண்டனைகள் வாட்டிவிடும், கொள்கைகளை மாற்றிவிடும் என்றிருந்தால் கோட்டைவிடுங் காட்சியைத்தான் கொண்டுவரும் கண்முன்னே; அண்ணலிவர் பட்டதுயர் ஆள்வோரால் பட்டஅடி எண்ணில் அடங்காது - எனினுமவர் வெற்றிகண்டார்; பாருலகம் எங்கணுமே பாராத வெற்றியிது ஒருருவம் உண்மை உழைப்பால் பெறும்வெற்றி! கொள்ளையிட வில்லை கொலைப்புரட்சி செய்யவில்லை வெள்ளமெனச் செங்குருதி வீணாகச் சிந்தவில்லை . 90 அன்புப் புரட்சி அகிம்சைப் புரட்சியினால் இன்பத் திருநாட்டில் ஏற்பட்ட வெற்றியிது வெற்றித் திருமகனை, வேண்டும் விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவனைப் பேணி வணங்கிடுவோம்; அன்றொருநாள் மாந்தர் அறிவை இழந்துவிட்டுக் கொன்றுதிரி காட்டுக் கொடுவிலங்காய் மாறிவிட்டார்; கொள்ளையடித்தார், கொலைகள் மிகச்செய்தார்; அள்ளியள்ளி உண்டார் அரிவையர்தம் கற்பைனலாம்; பிள்ளையென்று பாரார் பெரியரென்றுந் தாம்நோக்கார் வெள்ளைமனப் பெண்டிரென எள்ளளவும் எண்ணாராய் 100 மாமதங் கொண்டு மதவெறியால் மக்களெனும்