பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாட்டுப் பறவைகள்

கலிவெண்பா

முன்னைப் புலவரெலாம் முன்னின்று பாடல்சொல அன்னைத் திருநாட்டை ஆண்டார் தமிழ்வேந்தர்: பார்தாங்கும் மூவேந்தர் பண்டை முடியரசர் பேர்தாங்குங் காரணத்தாற் பேரறிவுச் சான்றோர்கள், பாடுங் கவியரங்கிற் பாட்டுத் தலைவனெனக் கூடும் படிவைத்தார் கொல்லோ அறியகிலேன்: பாடி மகிழ்வித்த பாட்டுப் பறவைகளைப் பாடி மகிழ்விக்கப் பன்னிருவர் வந்துள்ளார்; பாட்டரங்கில் என்னையுமோர் பங்குகொளச் செய்திடுமா நாட்டவர்க்கென் நன்றி நவில்கின்றேன் கைகுவித்தே 10 காலத்தை வென்றவளே. கற்பனைக்கும் எட்டாமல் ஞாலத்தில் நின்றொளிரும் நந்தா மணிவிளக்கே, நெஞ்சத் திருக்கோவில் நின்றிருந் தெந்நாளும் o அஞ்சலெனச் சொல்லி அரவணைக்கு: தெய்வதமே, ?/ நெஞ்சை அகலாக்கி நீங்காத அன்பென்னும் பஞ்சைத் திரியாக்கிப் பற்றும் உணர்வை எரியாக்கி ஏற்றும் எழில்விளக்கே, முன்னைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/13&oldid=571621" இலிருந்து மீள்விக்கப்பட்டது