பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகழ்க்கம்பன்

எண்சீர் விருத்தம்

புகழ்மிகுத்து வாழ்வாரே வாழ்வார் நல்ல U புகழ்விடுத்தார் வாழாதார் என்ற வாய்மை k W புகல்கின்ற முந்தையருள் முதல்வனான

பொய்யாத மொழிப்புலவன் சொன்னான்; மேலும் புகழ்வருமேல் இன்னுயிருங் கொடுத்து நிற்பர்

புன்மைவரும் எனில்உலகே கிடைக்கு மேனும் இகழ்ந்ததனைக் கொள்ளார்நற் சான்றோர் என்றே

இளம்பருவப் பெருவழுதி இயம்பி நின்றான்.

பிறக்குங்கால் புகழோடு பிறப்பா ருண்டு;

பிறந்தபினர்த் தம்முழைப்பால் அறிவின் ஆற்றல் சிறக்குங்கால் புகழடைந்து வாழ்வார் உண்டு:

செலவழித்து விலைகொடுத்துப் புகழை வாங்கப் பறக்கும்பேர் சிலருண்டு; வேண்டு மென்றே

பலர்க்கதனைச் சுமத்துவதும் வழக்கில் உண்டு; பிறக்குங்கால் புகழோடு பிறந்தான் கம்பன்

பெருமைக்கே உறைவிடமாய்த் திகழ்ந்து நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/35&oldid=571642" இலிருந்து மீள்விக்கப்பட்டது