பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தமிழ் வளர்த்த நகரங்கள்


‘பொன்மன்றம் பொற்றா மரையொக்கும் அம்மன்றில்
செம்மல் திருமேனி தேனெக்கும் அத்தேனை
உண்டு களிக்கும் களிவண்டை ஒக்குமே
எம்பெரு மாட்டி விழி’

என்பது குமரகுருபரரின் பாடலாகும்.

தில்லையில் கவிமணி

இவ் இருபதாம் நூற்றாண்டில் விளங்கிய இனிய செந்தமிழ்க் கவிஞராகிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தில்லையைச் சென்று கண்டார். அங்குள்ள சிற்றம்பலத்தில் கூத்தன் களிகடம் புரிவதையும் கண்டு மகிழ்ந்தார், அப்பெருமான் அல்லும் பகலும் ஒயாது நின்று ஆடுவதற்குக் காரணம் யாதாகலாம் என்று ஆராய்ந்தார். அத்தில்லையின் கிழக்கு எல்லையில் அண்ணாமலை மன்னர் அமைத்துள்ள பல்கலைக் கழகத்தைக் கண்டுதான் கழிபேருவகை கொண்டு இவ்வாறு ஆடுகின்றான் என்று பாடினர்.

‘தில்லைப் பதியுடையான் சிற்றம் பலமதனில்
அல்லும் பகலும்கின்(று) ஆடுகின்றான்-எல்லைக்கண்
அண்ணா மலைமன் அமைத்த கலைக்கழகம்
கண்ணாரக் கண்டு களித்து’

என்பது கவிமணியின் மணியான பாடலாகும்.