உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

224 கழகம், ஆரியரை ஒழித்திடும் வேலையை அல்ல,ஆரியத்தை ஒழித்திடும் வேலையில் ஈடுபடுகிறது! இது ஆரியரை ஆதரிக் கும் அற்பத்தனம் என்று கூறுவோர், நாம் மனித உருவம் பெற்றிருப்பதே சகிக்க முடியாத அக்ரமம் என்ற அளவுக்குத் 'துவேஷம்' கொண்டவர்கள். ஆரியம், அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை,அம்பல வாண முதலியாரிடமும் இருக்கிறது; ஆதிசேஷ செட்டி யாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிட மும் இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும் இருக்கிறது! விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும் பூணூ லும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சி களிடம் இருக்கிறது, நாயுடுகளிடம் இருக்கிறது; ஏன், காமராஜரின் நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம். எனவேதான் ஆரியரை ஒழிப்பது என்பது நமது திட்ட மாகாமல், ஆரியத்தை ஒழிப்பது நமது திட்டமாக இருக் கிறது. இதிலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் ஏற் படும் வகையில் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம். ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல, திராவிடரிடமும் புகுத் தப்பட்டிருக்கிறது; அதைப் புகுத்தி, பாதுகாத்துவரும் பணி யில், ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும் கூட ஈடு படக் காண்கிறோம். எனவே, ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான் முறையே தவிர, அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம். 'போஸ்டர் ' விஷயத்திலே, 'சர்க்கார்' இந்த அளவுக்கு ஆரியரிடம் அச்சப்பட்டு அடிபணிகிறதுஎன்றால், அக்ரகாரத் தைக் கொளுத்த பெட்ரோல் டின்கள் வாங்கித் தரும் என்று எதிர்பார்த்தா, அதற்குச் சாமரம் வீசிக்கொண்டு கிடப்பது! தமிழரிடம் பற்றும் பரிவும் கொண்ட ஒரு சர்க்காருக்காக நாம் தவம் கிடந்தது கண்டு காலதேவன் கருணைகொண்டு, காமரா ஜர் சர்க்காரை நமக்கு அருளி இருப்பதுபோலவும், இந்தச் சர்க்காருடைய சக்தியைத் துணைகொண்டு, ஆரியரை ஒழித் திடும் காரியத்தைக்கூடச் சாதித்துக்கொள்ளலாமென்றும் பகற்கனவு காண்போருக்கு, இந்த சர்க்காரும் ஏனைய சர்க்கார் போலவே ஆரியருக்கு அடிபணியும் சர்க்கார்தான் என்பதைச் சென்ற கிழமை சட்டசபைப் பேச்சு எடுத்துக் காட்டுகிறது. எனவே தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித்தொழிக்க வேண்டும்-அந்த ஆரியம் அக்ரகாரத்தில் மட்டுமில்லை!