பக்கம்:தரங்கம்பாடித் தங்கப் புதையல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37



வரவழைக்கலாம். இப்படிச் சொல்வதற்கு என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று முடிவாகப் புதிய போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் தெரிவித்துவிட்டார்.

"அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. வீணாகத் தொந்தரவில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்று அவர் கருதுகிறார்' என்று தங்கமணியிடம் கூறினார் தங்கவேலு.

பின்பு, அவர் உடனே சர்டிபிகேட் முதலிய சான்றுகளையெல்லாம் அனுப்பும்படி தந்தி கொடுத் தார். 'உங்கள் ஆராய்ச்சிக்கு இரண்டு நாட்கள் ஒய்வு, அதற்குள் சர்டிபிகேட் வந்துவிடும். பொறுத்துக்கொள்ளுங்கள்' என்றும் கூறிவிட்டார்.