176 H த ரும தி பிகை
உணவை நாளும் சுவைகண்டு உண்டல்போல் உாையை யாண்டும் இனிமையாகப் பேச வேண்டும் என்க. I
இன்புறப் பேசத் தக்க இனிய வாயால் பிறர் துன்புறம் படி பேசலாகாது ; பேசின், அத்துன்பங்களெல்லாம் பேசினவனேயே வந்து பற்றி ரீசப்படுத்தும்.
- உன்னே அழைத்து வருமே அவம் ”
фтT oТТ உணர்த்தியது பேச்சில் பிழை இழையாமல் பிழைக்க வேண்டி. ஈனம்=இழிவு, துயர். அவம்= கேடு. தீயன பேசுகின்ற வாயன் தீயய்ைக் கொடிய நோயினுள்ளே போய் மாய்கின்ருன்.
கொடுஞ்சொல் லுடையவன் கடுங்கேடு அடைதலால் தீமை யான அவ்வார்த்தைகளைப் பேசாதவன் தன்னே இனிது பாது காத்தவனுகின்ருன்.
எவ்வழியும் இன்சொல்லே கூறவேண்டும் என்பது குறிப்பு.
152. சொல்லே ஒருவன்றன் தொன்மை வழிமுறையை
மெல்ல வுரைத்து விளக்குமால்-இசால்லில் இனியர் எவர்க்கும் இனியர் ; இனியார்
-- === _ _ 를
துனியர் அவர்க்கே துயர். )ع-(
இ-ள்.
ஒருவன் வாய்ச் சொல்லே அவனுடைய பிறப்பு நிலைமை யை விளக்கியருளும் ; சொல்லில் இனிமையாளர் எல்லார்க்கும் இனியாாகின்ருர் ; இனிமை யில்லாதவர் யாண்டும் வெறுக்கப் படுகின்ருர் என்றவாறு.
இது, மனிதனது மேன்மையின் எல்லையைச் சொல்லால் அறியலாம் என்கின்றது. மெல்ல விளக்கும்=நளினமாக உணர் த்தியருளும். உள்ள கிலேயைச் சொல்லால் உணர்ந்துகொள்ள லாம் என்றமையால் உாையின் அதிசய அமைதி தெளிவாம்.
தொன்மை = பழைமை. வழிமுறையே சிறந்த விழுமிய குடியில் பிறந்தவர் வாயில் இழி மொழிகள் வாாா. எவன் வாயில் பயனும் பண்பும் கிறைந்த இனிய சொல் வருகின்றதோ, அவன் உயர் குல மகனம். பயனற்ற பழிமொழிகள் கூறுவோன் இழி மகன் ஆகின்ருன். --
சொல் உணர்வின் வழியே எழுவது ஆகலான் அது மனித னது உயர்வு தாழ்வுகளை அறிதற்கு உாை கல்லாய் கின்றது.