பக்கம்:தரும தீபிகை 6.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. யூ. க ம் 2165 இத்தகைய விவேகத்தோடு வினைகளைச் செய்துவரின் அந்த மனிதன் அதிசய நிலைகளை விரைந்து அடைந்து கொள்ளுகிருன். யூகமாய்ச் சிந்தித்துக் கருமங்களைப் புரிந்து வருவது அரச கருமங்களாப் நிறைந்து வருகிறது. விவேகமும் வினையாண்மை யும் வேந்தனை மேலான நிலையில் நன்கு விளக்கி வருகின்றன. சிறந்த மதியூகம் அமைந்திருந்தாலும் காலம் கருதி இடம் நோக்கித் தகுந்த காரியங்களைச் செய்ய வி ல் லை ய.ா ன ல் அது மழுங்கி விடும் ஆதலால் யா ண் டு ம் அயராமல் செயலோடு தோப்ந்து வரவேண்டும். திட்டத் திட்ட வாள் கூர்மை ஆகும்; செயலில் நாட்ட நாட்ட யூகம் சீர்மையாய்ச் சிறந்து விளங்கும். காரியத்தை எவ்வழியும் செவ்வையாக் கருதிச்செய்; சீரியமேன் மைகள் யாவும் உன்னை நோக்கி வீரியமாய் விரைந்து வரும். _ 833 தகுதி கிலேதெரிது தக்காரை நாடிப் பகுதி வகையைப் பகுத்துத்-தொகுதிதொறும் நாடி வினை செய்யின் காடும் அரசுமே பீடும் திருவும் பெறும். (க.) நேர்மையான குணநலங்களை அறிந்து தகுதியான சல்லோரை ஆராய்ந்து வினை வகைகளில் இனமாக விடுத்து எல்லாத் தொகுதி களையும் நாளும் நன்கு நோக்கிவரின் அ ங் த அரசு அரிய பல செல்வங்களை அடைந்து பெரிய மேன்மைகள் பெற்று விளங் கும்; அந்தப் பேற்றை விரைந்து பெறுக என்பதாம். அறிவும் அவாவும் ஆற்றல்களும் சீவர்களிடம் இயல்பாகவே மருவியுள்ளன. பழக்க வழக்கங்களின் வகைகளாலும் பயிற்சி முயற்சிகளின் தொகைகளாலும் அவை உயர்ச்சி காழ்ச்சிகளை அடைந்து உரிமையான பலன்களைப் பயந்து வருகின்றன. ஒருவன் எதனேடு பழகிப்பயின்.அறு வருகின்ருனே அவன் அந்த வகையில் சிறந்து திகழ்கின்ருன்; தொழில்கள் பல்வேறு நிலைகளில் பரவியிருக்கின்றன. கான் பழகிக் கெளிங்கதன் கண் னேயே எவனும் வளமையாய் உயர்ந்து நிற்கின்ருன். செய்ய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/342&oldid=1327739" இலிருந்து மீள்விக்கப்பட்டது