பக்கம்:தாயின் மணிவயிற்றில்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

இன்றைய உலகம் விஞ்ஞான உலகம். ஏன்? இன்றைக் குப் பல விஞ்ஞானிகள் உலகில் பலப்பல புது உண்மைகளையெல்லாம் கண்டு பிடிக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாமல் அப்பால் உள்ளவற்றை யெல்லாம் கண்டு பிடித்து வியக்கிறார்கள். அது போன்றே அணுவுக்கு அணுவா பல பொருள்களையும் ஆராய்கிறார்கள். 'அணுமிகச் சிறியது; அதைப் பிளக்க முடியாது' என்று நம்பி இருந்த கொள்கையை மாற்றி, அதைப் பிளந்தார்கள். அதிலிருந்து அழிக்கவும் ஆக்கவும் வல்ல பல கருவிகளை உண்டாக்கினார்கள். அப்படியே மக்கள் உடலுக்குள் இருக்கும் பொருள்களையும் எளிதாகக் காண்கிறார்கள். தாய் வயிற்றில் உண்டாகும் கருவைக் காண்கிறார்கள். அது நாள்தோறும் முறைப்படி வளர்ந்து வருவதை விளக்குகிறார்கள். என்றாலும் அவை பற்றியெல்லாம் ஆங்கிலத்தின்தான் பல நூல்கள் உள்ளன. அவையும் சாதாரண மக்கள் படித்து அறிந்து கொள்ள முடியாதன. எனவே எளிய முறையில் நம் நாட்டு மொழியில் இந்த நூலே எழுதினால் பயன் உண்டாகும் என நினைத்தே இதை வெளியிடுகிறேன். தாயின் மணி வயிற்றில் வளரும் நிலை பற்றியே இந்நூல் அமைவதால் இதற்கு இப்பெயர் இட்டேன். தமிழ் மக்களுக்கு இந்த நூல் பெரிதும் பயன்படும் என்ற நம்பிக்கையில் உங்கள் முன் வைக்கிறேன்.

ஆசிரியன்.