உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ஆட்டக் காவடி ற 27 எப்போதும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அலட்சியம் செய்துவிடும் அவள் அன்றைக்கு ஏனோ தெருப்பக்கம் திரும்பிப் பார்த்தாள். பார்த்தவள் கண்களைத் திரும்ப எடுக்க முடியாமல் திணறிப் போனாள். ஆட்டக் காவடி ஆட்டம்! அதிரூப சுந்தரன் ஒருவன்-அழகும் இளமை யும் தேங்கிய உருவினன்- குன்றனைய தனது நெடுங் தோளில் ஆட்டக் காவடியை சுமந்திருந்தான். எழுச்சியூட்டும் பம்பை முழக்கம் - அதற்கேற்றாற் போல அவன் ஆடும் துடிப்பு நிறைந்த ஆட்டம்-“ஆகா அழகான வாலிபன் - அற்புதமான கலை!" என்று தனக் குள்ளேயே யாரோ பேசியது போலிருந்தது அவளுக்கு! கண்களை சிறிது திருப்பினாள்-திடுக்கிட்டாள்-அந்த ஊர் மிராசுதார் மிருகண்டு முதலியார். அவரது தர்மபத்தினி, பட்டணத்துக் கல்லூரியில் படிக்கும் அவரது மகன்- மூவரும் நெற்றியிலே அலகுகளைக் குத்திக் கொண்டு, பக்திப் பூர்வமான பாற் காவடிகளை சுமந்தபடி நின்றார் கள். இப்போது கனிமொழிக்கு ஆட்டக் காவடிக் கலை யும் வெறுத்துவிட்டது. . - அடப் பாவிகளே - அருமையான கலை இதை விழ லுக் கிரைக்கும் நீராக்குகிறார்களே - சந்தனத்தை சாக்கடை நீரில் குழைத்துத் தருகிறார்களே -பாலோடு விஷம் கலந்தாலும் - விஷத்தோடு பால் கலந்தாலும் இரண்டும் ஒன்றுதானே- என்றெல்லாம் எண்ணியபடி வாயிற்படியில் வியப்பும் விசாரத்தோடும் கொண்டிருந்தாள். மிராசுதார் மிருகண்டுவின் பார்வை மட்டும் கனிமொழியின் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. தோளிலே காவடி! மனதிலே கனிமொழி மந்திரம்! நின்று