உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர தாய்மை சரசத்தாலும் சாகசத்தாலும் எப்படியோ அரசி யின்மீது அரசனுக்கு இருந்த அன்பை அழித்துவிட்டேன். அரசனது இருதயத்திலே அழியாத சித்திரமாக அமர்ந் திருந்தாள் அந்தக் கோப்பெருந்தேவி. அந்தக் கலையாத ஓவியத்தைக் கரிகொண்டு மெழுகிவிட்டேன். “மன்னனின் மன மாளிகையில் ஜோதி விளக்கு அவள். ஒரு காலத்தில்! அந்த ஜோதி விளக்கு இன்று வீதியிலே வீசப்பட்டுவிட்டது. தோழிகள் புடை சூழ - தோகை மயில்கள் ஆடும் நந்தவனத்தில் மலரால். நடை பாதை அமைத்து, அவளும் அரசரும் ஆனந்த பவனி கள் நடத்தினரே-அது அந்தக் காலம். 66 'இப்போது வேந்தரின் இருதயத்தில் இந்த சுழற் கண்ணியின் சுந்தர ரூபம் பூஜை அறைப் படம்போல ஜோடித்து வைக்கப்பட்டிருக்கிறது. வேந்தரின் மடியும்,