உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பு 69 சென்னையிலே கோகுல் வீட்டு மெத்தையிலே குமார் தூங்கிக் கொண்டிருக்கிறான்.... கனவு ! குழந்தையின் கனவு எதுவாக இருக்கும்? எந்த அப்பாவியை அடித்து, யாரை மோசம்செய்து. லட்சாதிபதியாகலாம் என்று கனவு காணப் போகிறதா? அல்லது பதவி தேடுவதற்காக எப்படி யெப்படிக்கொள் கைகளைக் காற்றிலே பறக்கவிடலாம், யார் யாரைக் 'காக்கா' பிடிக்கலாம் என்று கனவு காணப் போகிறதா? குழந்தையின் கனவுகள் முள்ளிலேயிருக்கும் ரோஜா வைப் பறிப்பது போலிருக்குமே தவிர, தேன் பூச்சிகளை அழித்துவிட்டு, தேனடையை எடுத்துக் கசக்கிப் பிழி வதைப் போலிருக்காது! ! அதுவும் தாயை இழந்த ஒரு குழந்தையின் கனவு எப்படியிருக்கும்? மிக மிக மென்மையான கனவு ரோஜாவைப் பறிப்பதுபோலக்கூட இல்லாமல் ரோஜா மலரே, குழந்தையின் கன்னத்தில் வந்து விழுந்து விடு வது போன்ற கனவு! ஆம் குமாரின் தாயார் அவனைத் தூக்கி முத்தமிட்டு மார்போடணைத்துக் கொஞ்சுகிறாள்... 'ஆராரோ' பாடுகிறாள்... அவனோ தூங்க மறுக்கிறான்... காலை நேரம்... தலைவாரி உடையலங்காரம் செய்து அவ னைப் பள்ளிக்கூடம் அனுப்புகிறாள். அவன் போகும் போது பின்னழகைப் பார்த்தபடி வாயிற்படியிலே நிற் கிறாள்... பள்ளியிலிருந்து திரும்பி வருகிறான். எதிர் கொண்டழைத்து உச்சி முகந்து முத்தமிட்டு விளையாட அழைத்துச் செல்கிறாள்... குமார் விழித்துக்கொள்ளுகிறான். கனவு ! தாயா ரைக்காணவில்லை ! ரோஜா மறைந்து விட்டது. படுக்கை 5