பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதிப்புரை

    தமிழில் சிறுகதை இலக்கியம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. தொழிற் சாலையிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பொருள்கள் உற்பத்தியாகி வெளிவருவது போல், ஒவ்வொரு நாளும் புதுப் புதுப் கதைகள் ஆயிரக்கணக்கில் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இவற்றில், தனித் தன்மையும், சிறப்பும் பெற்று வெளி வருவன ஒரு சிலவே. அந்த ஒரு சிலவற்றுள் பூவை எஸ். ஆறுமுகத்தின் கதைகள் அடங்கியுள்ளன.
     பூவை, தனக்கென ஒரு தனித் தன்மை பெற்றவர். கிராமிய வசனங்களில்லே ஒரு புது மெருகு சேர்த்து, கதை யைப் பொலிவு பெறச் செய்யும் சிறந்த திறமை அவரிடம் பொதிந்து கிடக்கின்றது. .
     பாத்திரங்களை நேரடியாகப் பேசவிட்டுக் கதையைச் சுவைப்படுத்திக் கூறும் அவருடைய நடை ஒரு கவர்ச்சி நடையேயாகும். தாய்வீட்டுச் சீர் என்ற இந்தக் கதைத் தொகுதியில் அந்தச் சுவை மலிந்துகிடக்கின்றது. வாழ்க் கையை இலட்சியமாக்கும் இந்தக் கதைகளைத் தமிழ் வாசகர்களுக்கு விருந்தாக வழங்குகிறேன்.


           ஏ. திருநாவுக்காசு.