பக்கம்:தாவிப்பாயும் தங்கக் குதிரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

கூடியிருந்தார்கள். பழி பாவம் அறியாத இரண்டு பிள்ளைகளைப் பலிகேட்ட ஒரு தெய்வமும் தெய்வமா என்று அவர்கள் தெய்வத்தின் பேரிலேயே வெறுப்புக் கொண்டார்

கோயிலில் தேவதைகளுக்குப் பூசை நடந்தது.

பூசை முடிந்தவுடன் பூசாரி கையில் அரிவாளுடன் வெளியில் வந்தான். இரண்டு மூன்று ஆட்கள் இளவரசனையும் இளவரசியையும் பலிபீடத்தின் மேல் ஏற்றி நிற்க வைத்தார்கள். பூசாரியும் பலிபீடத்தின் மேல் ஏறினான். வானத்தை நோக்கி, “தேவர்களே, நீங்கள் விரும்பிய பலியை ஏற்றுக் கொள்ளுங்கள் நாட்டைச் செழிக்கச் செய்யுங்கள்! அற்ப உயிர்களாகிய எங்கள் மேல் உள்ள வெறுப்பையகற்றி உங்கள் அன்பைப் பொழியுங்கள்!” என்று கூவினான்.