பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

கதைகள் பல ரகம். ஒரு நந்தவனத்தில் மலர்களில் எத்தனை வண்ணங்கள் உண்டோ, மனங்கள் உண்டோ, தினுசுகள் உண்டோ -- அவ்வளவு ரகங்கள் கதைகளிலும் உண்டு. ஆனல் தாமரையின் அழகே தனி அழகு! அதுபோல லட்சியக் கதைகளின் ஸ்தானம் தனியானது. தம்முடைய எழுத்துக்களில் நல்ல லட்சியங்களையும், கொள்கைகளையும் நிலைநாட்டி வருகின்றவர் பூவை. ஆறுமுகம். பூவையாரின் எழுத்துக்கள் பொன்னை நிகர்த்தன. காய்ச்சக் காய்ச்ச புதுப் பொலிவைப் பொன் காட்டுதல் போன்று படிக்குந் தோறும் நவரசங்களை மனதில் நிரப்ப வல்லது அவருடைய சிறு கதைகள்.

தாஷ்கண்ட் விடு - இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் இளைஞர்கள் மத்தியில் சீரிய ஒழுக்கங்களைத் திரட்டித் தரும் மென் குவியல் ஒவ்வொன்றிலும் புதுப் புதுச் சுவை மேலான எண்ணக் கோவை!

எஸ். வடிவேலு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாஷ்கண்ட்_வீடு.pdf/5&oldid=1111706" இலிருந்து மீள்விக்கப்பட்டது