பக்கம்:திருஅல்லிக்கேணி மஹாத்மியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவல்லிக்கேணி மஹாத்மியம் 15 வான் வாரீர் அத்ரியே நீர் இந்திரியஸமூகஹங்களை ஜயித்து இதா விஷங்களில் ஆசாரஹிதராய் என்விஷயத்தில் பரிபூர்ணமான பக்தி யைச் செய்தீராகையால் உமது விஷயத்தில் அனுக்கிரஹமுள்ள நான் உமக்கும் உமது சம்பந்த சம்பந்திகளுக்கும் மோக்ஷத்தைக் கொடுக்கிறேன். பரிசுத்தமாகவும் சாசுவதமாகவு மிருக்கும் பரம பதத்தைச் சீக்கிரமாக அடையக்கடவீர் என் றருளிச்செய்தனர். லக்ஷ்மீ நரசிம்ஹ மூர்த்தியான அழகியசிங்கரின் கடாக்ஷத்தைப் பெற்று அத்ரீமஹாருஷியும் ஜாலிமஹாருஷியுடனே சர்ப்பமானது ஜீர்ணமான சர்மத்தை விடுமாப்போலே சரீரத்தை விட்டார். இப்படிதேஹத்தைப் பரிஹரித்தவர்களிருவரும் கோடி சூர்யப்ர காசமான விமானத்திலே மஹருஷிகள் பார்த்துப் பூஜிக்கவேறி லோகாந்தரங்களிலுள்ள தேவர்கள் கொண்டாட பாலசூர்யாளைப் போலே அதிசோபா சம்பன்னராய்ப் பரமபதத்தை யடைந்தார் கள். அன்றுமுதல் லோக்குருவான ஸ்ரீநரசிம்ஹ மூர்த்தியானவர் மனோஹரமான ப்ருந்தாவனத்திலே சகல தேவர்கள் முதலான லீலாவிபூதியிலுள்ள சேதனர்கள் பூஜித்து உஜ்ஜீவிக்கும்பொருட்டு அர்ச்சாரூபமாக நிர்ஹேதுகக் கிருபையினாலே தெள்ளியசிங்கர் சேவைசா திக்கின்றார்.வாரீர் நாரதரே! ஆகையால் இந்த வைப வத்தைக் கேட்கின்றவர்கள் சர்வாபீஷ்டங்களையு மடைந்து மோக்ஷத்தையும் பெறுவார்களென்று நாரதரைப் பார்த்துச் சிவபிரான்சொல்லிப் பின்னுஞ் சொல்லுகின்றார். T