பக்கம்:திருக்குறளார் தெளிவுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால்

இல்லற இயல்19



அறத்துப்பால் இல்லற இயல் 19 10. இனியவை கூறல் (இனிமையான சொற்களைச் சொல்லுத்லும், பயனும்) 1. இன்சொலால் ஈரம் அளை இப் படிறுஇலவாம் 2 செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91 அறத்தினை அறிந்தவர்கள், வஞ்சனையிலாதவைகளாகி அன்போடு கலந்து சொல்லுகின்ற சொற்கள், இன்சொற்கள் எனப்படுவதாகும். அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின், 92 முகமலர்ச்சியுடன் இனிய சொல்லினனாக இருந்து விட்டால், அத்தன்மை நெஞ்சம் உவந்து ஈகையினைச் செய்வதை விடவும் நல்லதாகும், முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். 93 முகத்தினால் விரும்பி இனிமையாகப் பார்த்து மனத்துடன் பொருந்திய இனிய சொற்களைச் சொல்லுவதில் அமையப் பெற்றதே அறமாகும். துன்புறுஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறுஉம் இன்சொ லவர்க்கு. 94 எல்லோரிடத்திலும் இன்பத்தினை உண்டாக்கும் இனிய சொற்களைச் சொல்லுபவர்களுக்குத் துன்பத்தினை மிகுவிக்கும் வறுமை என்பது இல்லை. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணிஅல்ல மற்றுப் பிற. 95. பணிந்து நடத்தலும், இன்சொல்லும் ஆகிய இரண்டும். ஒருவருக்கு அணிகலன்களாகும். மற்றவை அணிகலன்கள் .BI٢غ,{چى