ஜைன உரை
509
அவரை மறவாமல் நினைந்தேனாயின் மறுமையிலே அவரை அடைந்து இன்புறலாம்; ஆனபடியினாலே மறக்கமாட்டேன் என்பதாம். ௨
1263. உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்
வரனசைஇ யின்னு முளேன்
என்பது
இன்பம் அனுபவிக்கிறதை விரும்பாமல் வெல்லுதலை நினைந்து நாம் துணையாகிறதை இகழ்ந்து, தம் ஊக்கம் துணையாகப் போயினார்; அதனை விட்டுத் திரும்பிவருவாரென்கிறதினாலே நான் இன்னும் பிராணனுடனே இருக்கிறேன் என்றவாறு.
அவர் வாரா ரென்பதறிந்தால் அன்றே இறந்து போவேனென்பதாம். ௩
1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் னெஞ்சு
என்பது
நம்மேல் ஆசையை விட்டுப் பிரிந்து போனவர் மேல் கூடிய காமத்துடனே வருகிறதை நினைந்து என்நெஞ்சு வருத்தம் ஒழிந்து மென்மேலும் சந்தோஷத்தை அடையா நின்றது என்றவாறு. ௪
1265. காண்கமற் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்குமென் மென்றோட் பசப்பு
என்பது
கண்கள் சந்தோஷப் படும்வகை என் கணவனை யான் காண்பேனாக; அப்படிக் கண்டபின் என் தோளிலே பூத்த பசலை தானே நீங்கும் என்றவாறு.
கேட்டதனாலே நீங்கா தென்பதாம் ௫