பக்கம்:திருக்குறள், மூலம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் செய்திகள்-கருத்துரைகள்

“சமீபத்தில் பேராசிரியர் பெருமகன் ரா. சி. அவர்கள் எழுதியிருக்கும் தெய்வத் திருமகன், திருக்குறள் செய்திகள்', "திரெளபதி சூளுரை ஆகிய நூல்கள் காலத்தை வென்று நிறகும் காவியங்கள்”.

—கவியரசு வைரமுத்து
(பாக்கியா இதழ் மே 1997 பேட்டி)

“திருக்குறள் தெரிவிக்கும் செய்திகள் எவை என்பதைக் குறட்பாக்களைத் தராமல் கொண்டிருப்பதுதான் இந் நூல். குறட்பாக்களின் சாரத்தை எளிய விளக்கங்களோடு அழகிய தமிழ்-காவிய நடையில் இந்நூல் அமைந்திருக்கிறது. ஓரளவிற்குத் தமிழ் தெரிந்தவர்கள் கூட இந் நூலைப் படித்தால் திருக்குறள் தெரிவிக்கும் செய்திகளை எளிதில் அறிந்து கொள்வார்கள்”.

—வள்ளுவர் வழி இதழ் விமரிசனம் குன் (95)

”இளந் தென்றலாய் மிதந்து வரும் வார்த்தைகள்: அடுக்கடுக்காய்ப் புரண்டு வரும் கடல் அலைகளைப் போல் வார்த்தைகளில் எதுகை மோனைகள்

முத்துக்களாய்க் கருத்துக் குவியல்கள்; வள்ளுவன் கருத்துக் கெல்லாம் ரா சீயின் வார்த்தைகள் மெருகு போட்டுள்ளன. சாணை பிடிக்கப்பட்ட கத்தி முனைப் பதங்கள்.

திருக்குறளை அறிய விரும்புபவர் பலர் பல புத்தகங்களைப் பாதியிலேயே விட்டு விடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் திருக்குறள் செய்திகள் என்னும் இந்நூல் சுவையானது. படிக்கத் தொடங்கிவிட்டால் முடிக்கும் வரை இது சுகமானது.

இந்நூல் அனைவர் இல்லங்களிலும் உள்ளங்ளிலும் இருக்க வேண்டி அற்புதமான நூல்.”

—கவிஞர் கணியூர் அதுநெஞ்சன்
நூல் அணிந்துரை)