இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
101 47. தெரிந்து செயல்வகை
அழிவது உம் ஆவது உம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்.
46?
தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்,
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார்,
தெளிவு இலதனைத் தொடங்கார் இழிவுஎன்னும் ஏதப்பாடு அஞ்சு பவர்.
வகைஅறச் சூழாது எழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோர் ஆறு.
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும்.
நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவரவர் பண்புஅறிந்து ஆற்றாக் கடை
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு.
462
463
464
465
466
467
468
469
470